எலன் மஸ்க், பெசோஸை பின்னுக்குத் தள்ளி.. 2021ம் ஆண்டில் உலகில் அதிக பணம் ஈட்டுவதில் அதானி முதலிடம்
டெல்லி: உலக பணக்கார்களான எலன் மஸ்க், பெசோஸ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 2021ம் ஆணடில் அதிக பணம் ஈட்டுவதில் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ப்ளூர்பெர்க் பொருளாதார இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உலகின் நம்பர்-1 பணக்காரராக முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் டெஸ்லா கார் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், 2021ல் அதிக பணம் சம்பாதித்தவர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பெசோஸ், மஸ்க்கை பின்னுக்கு தள்ளி நம்பர்-1 இடத்தை பிடித்திருப்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் அதானி.

உலகில் முதலிடம்
முதல் தலைமுறை தொழிலதிபரான கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 2021ம் ஆண்டில் மட்டும் 1.17 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு 3.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இதன் மூலம், அவர் உலகளவில் இந்தாண்டின் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதித்தவராக முதலிடத்தை பிடித்துள்ளார்.

மஸ்க் வருமானம்
இந்த கால கட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் ஆன்லைன் வணிகம் செய்து வரும் அமேசான் நிறுவனர் பெசோஸ் 55 ஆயிரம் கோடியும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் 74 ஆயிரம் கோடியும் சம்பாதித்து உள்ளார்கள். ஆசியாவின் நம்பர்-1 பணக்காரரான ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 58 ஆயிரம் கோடி மட்டுமே சம்பாதித்துள்ளார்.

பங்குகள் உயர்வு
கடந்த ஓராண்டில் அதானி குழும பங்குகள் அனைத்து 50 சதவீத வளர்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக, அதானி டோட்டல் 96%, அதானி எண்டர்பிரைசர்ஸ் 90%, அதானி டிரான்ஸ்மிஷன் 79%, அதானி பவர் - அதானி போர்ட்ஸ் ஆகிய இரண்டும் 52 % அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது. அதானி குழுமம் இந்தியாவில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் நிலக்கரி சுரங்க தொழில்களில் மிகப்பெரிய ஜாம்பவனாக உருவெடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க தொழிலில் ஈடுபடும் திட்டத்தை விரைவுப்படுத்தி வருகின்றது.

அதானி யார்
யார் இந்த கௌதம் அதானி, மும்பையி்ல கடந்த 1980களில் வைர தொழிலில் கால் பதித்த குஜராத்தை சேர்ந் தொழிலதிபர் கெளவுதம் அதானி அதில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து ஊருக்கு திரும்பிய அதானி தனது சகோதருடன் சேர்ந்து பிளாஸ்டிக் இறக்குமதி தொழில் ஈடுபட்டார். 1988ஆம் ஆண்டு அதானி எண்டர்பிரைஸஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அடுத்த பத்து வருடங்களில் முந்த்ராவில் தனி துறைமுகத்தை உருவாக்கினார். தற்போது இந்தியாவின் பெரிய தனியார் துறைமுகங்களைக் கொண்ட நிறுவனமாக அதானி குழுமம் வளர்ந்துள்ளது.

1.2லட்சம் கோடி உயர்வு
இதனிடையே அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது குறித்த செய்தியை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, '2020ம் ஆண்டில் உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு அதிகரித்தது? பூஜ்ஜியம். நீங்கள் வாழவே சிரமப்பட்ட நிலையில், அதானி ரூ.1.2 லட்சம் கோடி சம்பாதித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 50 சதவீதம் அதிகரித்துள்ளது. அது, எப்படி என்று எனக்கு சொல்ல முடியுமா?' என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications