அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
டெல்லி: பீகாரில் ஆர்ஜேடியுடன் இணைந்து ஜேடியூ புதிய கூட்டணி ஆட்சியை அமைத்திருப்பதன் மூலம் மாநிலத்தில் நிலையான ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என்று தேர்தல் உத்தி வகுப்பாளரும் ஜேடியூவின் முன்னாள் துணை தலைவருமான பிரசாந்த் கிஷோர் பாராட்டியுள்ளார்.
தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் 2 ஆண்டுகாலம் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியில் துணைத் தலைவராக இருந்தார். பின்னர் நிதிஷ்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஜேடியூவில் இருந்து பிரசாந்த் கிஷோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் பீகார் அரசியல் மாற்றம் தொடர்பாக மவுனம் கலைத்து பேசியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஜேடியூ, லாலுவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. பாட்னாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்; ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவியேற்றார்.
நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அமைச்சரவை ஆகஸ்ட் 15-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஆர்ஜேடி, ஜேடியூ இரு கட்சிகளும் தலா 14 அமைச்சர் பதவிகளைப் பெற உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி மற்றும் 4 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளன.
பீகார் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: பீகாரில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ள தனிப்பெரும் கட்சி. புதிய அரசாங்கத்தை அமைத்ததில் தேஜஸ்வி யாதவின் பங்களிப்பு மிக முக்கியமானது. நிதிஷ்குமார் தலைமையிலான இந்த புதிய அரசு எப்படி செயல்படப் போகிறது என்பதை மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கின்றனர்.
Recommended Video
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தொடர்ந்து ஜேடியூ பயணிப்பது என்பது சிக்கலாக இருந்தது. அதனால்தான் பாஜக கூட்டணியில் இருந்து ஜேடியூ விலகி இருக்கிறது. பீகார் மாநிலம் என்பது ஒரு மிகப் பெரிய மாநிலம்தான். ஆனால் இம்மாநிலத்தில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் உடனடியாக தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவிடாது. இப்படி ஒரு தலைகீழான முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னர் நிதிஷ்குமார் பல முறை யோசித்திருப்பார். பீகாரில் இனி நிலையான ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications