Budget 2022: வடகிழக்கு மாநில வளர்ச்சிக்கு புதிய திட்டம், பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லி : வடகிழக்கு மாநிலங்களில் வளர்சிக்காக பிரதமர் அபிவிருத்தி முன்னெடுப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின் போது புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று 2022- 2023 மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். முன்னதாக இளைஞர்கள், பெண்கள், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தொடர்ந்து தனது பட்ஜெட் உரையில் பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் வட கிழங்கு மாநிலங்களின் வளர்சிக்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக இந்த எல்லை செல்கிறது. மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த எல்லையின் மேற்குப் பகுதியில் ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பகுதியில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மற்றும் கிழக்குப் பகுதியில் சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடம் பெற்றுள்ளன.
இருப்பினும், இரு நாடுகளும் இன்னும் முழுமையாக எல்லைகளை வரையறுக்கவில்லை. ஏனென்றால் பல பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தகராறு நீடிக்கிறது. எல்லைத் தகராறு காரணமாகவும் பல்வேறு அரசியல் சூழ்நிலை காரணமாகவும் வடகிழக்கு மாநிலங்கள் பின் தங்கியே உள்ளது. இந்நிலையில் அந்த மாநிலங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பட்ஜெட் உரையின் போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வடகிழக்கு மாநிலங்களில் வளர்சிக்காக பிரதமர் அபிவிருத்தி முன்னெடுப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என கூறினார். இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள கிராமங்களின் வளர்ச்சியை மேம்படுத்த புதிய துடிப்பான கிராம திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications