வரலாறு காணாத அளவு உயர்ந்த விமான எரிபொருள் விலை.. விமான பயண கட்டணங்கள் உயருகிறது
டெல்லி: விமான எஞ்சின் எரிபொருள் விலை 8.5 சதவீதம் வரை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், விமான போக்குவரத்து கட்டணமும் உயரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணை நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையைப் போலவே விமான போக்குவரத்துக்கு பயன்படும் ஏவியேசன் டர்பைன் ஃப்யூல் எனப்படும் விமான போக்குவத்து எரிபொருளின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக விமான எரிபொருளின் விலை மாற்றமில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் விமான எரிபொருளின் விலை உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. விமான எரிபொருள் விலையை 8.5 சதவீதம் உயர்த்திய அரசு, விமான கட்டணமும் விரைவில் அதிகரிக்கலாம் என அறிவித்தது. அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனமும், ஏவியேசன் டர்பைன் ஃப்யூல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.
இதன்படி விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.6743 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் புதிய விலையில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் 86308.16 ரூபாயாக உள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விமான டிக்கெட் விலையில் கணிசமான தொகை விமான எரிபொருள் வரிக்கு செல்லும் என்பதால், விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு கட்டணத்தை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுவரை எந்த ஒரு விமான நிறுவனத்திலிருந்தும் முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications