எப்போதும் மாஸ் காட்டும் ராஜ்நாத் சிங்.. மோடி அமைச்சரவையில் இருக்கும் ஒரே வாஜ்பாய் காலத்து அமைச்சர்
டெல்லி: வாஜ்பாய் பிரதமராக இருந்த 1998-2004 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தவர்களில் ராஜ்நாத் சிங் மட்டுமே தற்போது பிரதமர் மோடியின் அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடியின் அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல் முருகன் உள்ளிட்ட 43 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
கடந்த 2018இல் மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு மேற்கொள்ளப்படும் முதல் அமைச்சரவை விரிவாக்கம் இதுதான். அடுத்து வரவிருக்கும் தேர்தல்களையும் கருத்தில் கொண்டே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மூத்த அமைச்சர்கள் நீக்கம்
பல முக்கிய மற்றம் மூத்த அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்தியா கொரோனா 2ஆம் அலையை மிக மோசமாகக் கையாண்டதாகப் பலரும் விமர்சித்த நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நீக்கப்பட்டுள்ளார். கல்வித் துறை அமைச்சராக இருந்த ரமேஷ் போக்ரியால், ஐடி துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் நீக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருந்தது.

ராஜ்நாத் சிங்
மொத்தமாக 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மூத்த அமைச்சர்களில் வெகு சிலர் மட்டுமே இந்த அமைச்சரவை மாற்றத்தில் தப்பித்தவர்கள். அவர்களில் முக்கியமானவர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 1998-2004 காலகட்டத்தில் வாஜ்பாய் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்களில் இப்போது ராஜ்நாத் சிங் மட்டுமே மோடியின் அமைச்சரவையிலும் அமைச்சராக உள்ளார்.

ஒரே அமைச்சர்
பாஜகவின் மற்ற முக்கிய அமைச்சர்களைப் போலவே இவரும் ஆஎஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்தவர், 13 வயது முதலே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை தானே இணைத்துக் கொண்டவர். 69 வயதாகும் ராஜ்நாத் சிங் வாஜ்பாய் ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் விவசாய துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். மேலும் 2000-2002ஆம் ஆண்டு வரை உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகவும் செயல்பட்டார். மோடியின் முதல் ஆட்சியில் 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை உள் துறை அமைச்சராகவும் இருந்தார்

மூத்த அமைச்சர்கள்
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் உள் துறை அமைச்சரான அமித் ஷாவுக்கு கூடுதலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவுத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கூடுதலாக கார்ப்பரேட் விவகாரங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூத்த அமைச்சர்களில் ஒருவரான நிதின்கட்கரி போக்குவரத்துத் துறை அமைச்சராகத் தொடர்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications