மமதா vs சிபிஐ.. எதிர்கட்சித் தலைவர்களுக்கு போன் போட்ட சந்திரபாபு நாயுடு.. தொடங்கியது ஆலோசனை!
எதிர்கட்சித்தலைவர்களுடன் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறார்.
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும், சிபிஐக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து எதிர்கட்சித்தலைவர்களுடன் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறார்.
சிபிஐ அதிகாரிகள் 15 பேர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்று கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய முயன்றது. தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா ஊழல் ஆகியவற்றில் குற்றம்சாட்டி இந்த கைது நடவடிக்கையை எடுக்க சிபிஐ முயன்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகளை கைது செய்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
தற்போது சிபிஐ மாநில அரசின் அனுமதி இல்லாமல் கொல்கத்தா கமிஷனரை கைது செய்ய முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா நடத்தி வருகிறார்.
இதையடுத்து தற்போது பல கட்சித் தலைவர்கள் மமதா பானர்ஜிக்கு போன் செய்து பேசி வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேலும் ஓமர் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், மாயாவதி, சரத்பவார் ஆகியோரும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் தற்போது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும், சிபிஐக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து எதிர்கட்சித்தலைவர்களுடன் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறார்.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. நாளை இவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இதை முன்னிட்டே இவர்கள் எல்லோரும் இன்று ஆலோசனை செய்வதாகவும் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல் பாஜக இதை எப்படி கையாளும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
நாளை க்ளைமேக்ஸ்.. சொந்த கட்சியில் இருந்தே நீக்கப்படும் மம்தா? திரிணாமுலில் பெரும் குழப்பம்! -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications