தமிழகம் மீது ஸ்பெஷல் அக்கறை.. முக்கிய கோரிக்கைகளுக்கு எல்லாம் கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்!
காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழகத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழகத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
தென்னிந்திய மக்கள் மோடியால் தனித்துவிடப்பட்டதாக உணர்கிறேன்; அவர்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே தென்னிந்தியாவில் போட்டியிடுகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில்தான் அவர் தமிழகத்தின் பல கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து இருக்கிறார். தமிழகத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக காங்கிரஸ் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநில பட்டியல்
காங்கிரஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்று, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற போவதாக அறிவித்து இருக்கிறது. அதாவது பள்ளி கல்வி மாநில பட்டியலிலும், உயர் கல்வி மத்திய பட்டியலிலும் இருக்கும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தமிழகத்தின் பல நாள் கோரிக்கை ஆகும்.

நீட் பிரச்சனை
ராகுல் காந்தி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் அந்த முறை ரத்து செய்யப்படும். தமிழகத்திலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், என்றுள்ளார். இது தமிழகத்தின் மிக முக்கியமான கோரிக்கை ஆகும்.
இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழா.. பங்கேற்க மறவாதீர்கள்

ஜிஎஸ்டி பிரச்சனை
ஜிஎஸ்டி மாற்றம் செய்யப்படும். ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார், இது தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் அதிகமாக வைத்த கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்
அதேபோல் விவசாயிகளுக்கான தனி பட்ஜெட் போடப்படும் என்று கூறியுள்ளார். இந்தியாவில் முதன்முதலாக திமுகதான் இந்த அறிவிப்பை வெளியிட்டது. தற்போது தனது கூட்டணி கட்சியான திமுகவின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டு அதே அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம்
அதேபோல் திமுக வெளியிட்ட இன்னொரு அறிவிப்பான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று காங்கிரசும் தற்போது கூறியுள்ளது. இது பல வருடங்களாக புதுச்சேரி மக்களின் கோரிக்கை ஆகும். இதுகுறித்தும் கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது.

மீனவர் பிரச்சனை
மிக முக்கியமாக மீனவர் பிரச்சனை சரிசெய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. முக்கியமாக இலங்கையுடனான மீனவர் பிரச்சனை சரி செய்யப்படும். மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இது தமிழர்களின் பல ஆண்டு கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாய கடன் அறிக்கை
அதேபோல் தமிழக விவசாயிகளின் இன்னொரு கோரிக்கையான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுக்க விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து இருக்கிறது.
-
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி












Click it and Unblock the Notifications