கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நிபந்தனை விதித்த டெல்லி நீதிமன்றம்.. விசா முறைகேடு வழக்கில் உத்தரவு
டெல்லி: விசா முறைகேடு தொடர்பான விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரத்திற்குச் சொந்தமான இடங்களில் சில நாட்களுக்கு முன்பு, சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, டெல்லி, மும்பை, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களில் ப. சிதம்பரத்திற்குச் சொந்தமான 7 இடங்களில் ரெய்டு நடைபெற்றது.

அதிரடி ரெய்டு
ப.சிதம்பரம் அமைச்சராக இருந்த சமயத்தில் தல்வண்டி சபோ பவர் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் 263 சீன மக்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டுகிறது. இந்த வழக்கில் தான் சில நாட்களுக்கு முன்பு சிபிஐ, அவருக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்துள்ளது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் கணக்காளர் எஸ் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டாக. அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ 4 நாட்கள் காவலுக்கு எடுத்துள்ளது.

எஸ் பாஸ்கரராமன்
எஸ் பாஸ்கரராமன் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது சிபிஐ சிறப்பு நீதிபதி பிரசாந்த் குமார், "இந்த வழக்கு விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்துவது சரியாக இருக்கும். எனவே, பாஸ்கரனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி அளிக்கிறோம்" என்று நீதிபதி குறிப்பிட்டார்.

முன்ஜாமீன்
இந்தச் சூழலில் விசா மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் இன்று முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். டெல்லியில் சிபிஐ சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.கே.நாக்பால், "சிபிஐ தரப்பு கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய நினைத்தால் அதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் வழங்குவது என்பது குறைவான கால அவகாசமாக உள்ளது. சிபிஐ கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய நினைத்தால், சட்டரீதியான தீர்வுகளைப் பெற விண்ணப்பதாரருக்குக் குறைந்தபட்சம் 3 வேலை நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications