மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமையில் வராது..உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வைத்த முக்கிய ‘பாயிண்ட்’
டெல்லி: மத சுதந்திரம் என்ற பெயரில் மாற்று மதத்தினரை மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமையில் வராது என்றும் கட்டாய மதமாற்றத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கட்டாய மதமாற்றம் விவகாரம் அவ்வப்போது எழுந்து வருகிறது. குறிப்பாக மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு இது குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன.
கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக பல மாநிலங்களில் சட்டம் இயற்றப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அரியானா, கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்கள் இதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.

கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரி
மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கும் வகை செய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவில், நாட்டின் பல பகுதிகளிலும் கட்டாய மதமாற்றம் நடப்பதாகவும் தூண்டுதல், ஏமாற்றுதல், அச்சுறுத்தல், பணம் , பரிசுபொருட்களை கொடுத்து மதமாற்றம் நடக்கிறது.

தீவிரமான பிரச்சினை
இதனை தடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் எம்.ஆர் ஷா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணை நடைபெற்ற போது, கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவை வைத்தனர்.

அடிப்படை உரிமையில் வராது
இதன்படி இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- மதமாற்றம் என்பது மத சுதந்திரத்தின் கீழ் அடிப்படை உரிமையில் வராது. கட்டாய மதமாற்றத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள், ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் தான் அதிகம் பாதிக்கபடுபவர்களாக இருக்கின்றனர்.

உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்
எனவே இவர்களின் உரிமைகளை பாதுகாக்க கட்டாய மதமாற்ற தடுப்பு சட்டம் அவசியம் ஆகிறது. ஒடிசா, மத்திய பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், கர்நடகா, அரியானா ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடுப்பு சட்டம் அமலில் இருக்கிறது. கட்டாய மதமாற்றத்தை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதமாறுவதை எதிர்க்கவில்லை.
இதையடுத்து, நீதிபதிகள் கூறும் போது, ''மதமாறுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. கட்டாய மதமாற்றம் என்பதைத்தான் எதிர்க்கிறோம். இந்த விவகாரத்தில் மாநில அரசுகளிடம் உரிய தகவல்கள் பெற்று விரிவான பிரமாணப்பத்திரைத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி இந்த வழக்கின் மறு விசாரணையை வரும் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications