ஹைட்ராக்சிகுளோரோகுயின் பலன் தரவில்லை.. இந்த 2 மருந்து நம்பிக்கை தருகிறது.. டாஸ்க் ஃபோர்ஸ் பரிந்துரை
கொரோனாவிற்கு எதிராக ஃபெவிபிரவிர் மற்றும் டோசிலிஃசுமாப் என்ற இரண்டு மருந்துகள் அதிக பலன் அளிக்கிறது என்று மத்திய அரசு அமைத்த TFORD எனப்படும் மருந்துகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான பணிக்குழு பரிந்துரை ச
டெல்லி: கொரோனாவிற்கு எதிராக ஃபெவிபிரவிர் மற்றும் டோசிலிஃசுமாப் என்ற இரண்டு மருந்துகள் அதிக பலன் அளிக்கிறது என்று மத்திய அரசு அமைத்த TFORD எனப்படும் மருந்துகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான பணிக்குழு பரிந்துரை செய்துள்ளது.
Recommended Video
பல்வேறு மருந்துகளை வெவ்வேறு நோய்களுக்கு எதிராக பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சி செய்ய மத்திய அரசு சார்பாக பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன் தலைமையில் TFORD எனப்படும் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க பல்வேறு மருந்துகள் தொடர்பாக இந்த குழு ஆராய்ச்சி நடத்தி வருகிறது.
அதேபோல் கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தும் 19 மருந்துகளை இந்த குழு ஆராய்ச்சி செய்து வந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகும் இது.

உலகம் முழுக்க உள்ள மருந்துகள்
உலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிராக கிட்டத்தட்ட 60 மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. அதாவது கொரோனாவை கட்டுப்படுத்த, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தீவிரமான மோசமான உடல்நிலையில் இருக்கும் நோயாளிகளை குணப்படுத்த என்று பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் இந்தியாவில் 19 மருந்துகள் பிரபலமாக இருக்கிறது. இந்த மருந்துகள் இந்தியாவிலேயே தயார் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சி
இந்த நிலையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின், குளோரோகுயின் உள்ளிட்ட 19 மருந்துகளை இந்த பணிக்குழு ஆராய்ச்சி செய்தது. இந்த மருந்துகள் கொரோனாவை தடுக்க எப்படி பயன்படுகிறது. கொரோனா ஏற்பட்டால் அதை குறைக்க எப்படி பயன்படுகிறது. எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது. இந்த மருந்துகள் இந்தியாவில் எவ்வளவு தயார் செய்யப்பட்டு உள்ளது என்று ஆராய்ச்சி செய்தது. இது தொடர்பாக வெளியான ஆராய்ச்சி கட்டுரை மற்றும் மருத்துவ சோதனைகள் மூலம் இந்த ஆராய்ச்சியை பணிக்குழு செய்துள்ளது.

என்ன மருந்துகள்
அதன்படி பின்வரும் மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன: ஹைட்ராக்சிகுளோரோகுயின், குளோரோகுயின், லோபினாவிர், பாலக்சிவிர் மார்பாக்சில், துரோனாவிர், ரிபாவிரின் +ஐஎப்என் பேடம் கிலாடேஸ்விர், ஓசெல்டாமிவிர், உமிபெனோவிர், கமோஸ்டாட் மெய்ஸ்லேட், இன்டெர்பெரோன் பீட்டா, ஃபெவிபிரவிர், டேய்கோபிளானின், நைஜர்சின், இவர்மெக்டின் மற்றும் டோசிலிஃசுமாப் ஆகிய மருந்துகள் சோதனை செய்யப்பட்டது.

என்ன முடிவு
இந்த சோதனையின் கொரோனாவிற்கு எதிராக ஃபெவிபிரவிர் மற்றும் டோசிலிஃசுமாப் என்ற இரண்டு மருந்துகள் அதிக பலன் அளிக்கிறது என்று மத்திய அரசு அமைத்த மருந்துகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான பணிக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஃபெவிபிரவிர் என்பது வைரஸ் தாக்குதலுக்கு எதிராக பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்து ஆகும். ஜப்பானில் இன்ஃபுளுயென்சாவிற்கு எதிராக இந்த ஃபெவிபிரவிர்தான் பயன்படுத்தப்பட்டது. மொத்தம் 18 மருத்துவ சோதனைக்கு இந்த ஃபெவிபிரவிர் உட்படுத்தப்பட்டது.

நல்ல பலன்
அதில் ஃபெவிபிரவிர் நல்ல பலன் அளிக்கும் வகையில் முடிவுகளை கொண்டு உள்ளது. அதேபோல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மருந்தான டோசிலிஃசுமாப் கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு உள்ளது. டோசிலிஃசுமாப் உலகம் முழுக்க மொத்தம் 21 மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதுவும் நல்ல பலன் அளிக்கிறது. இரண்டு மருந்தும் இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது.

பலன் இல்லை
ஆனால் ஹைட்ராக்சிகுளோரோகுயின், குளோரோகுயின் இரண்டும் பெரிய அளவில் கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என்று இந்த குழு கூறுகிறது. இந்த குழு நடத்திய சோதனையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின், குளோரோகுயின் குறைவான மதிப்பெண்தான் பெற்றுள்ளது. அதேபோல் ரெமிடிஸ்வர் மருந்தும் இதில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பெறுவதற்காக அமெரிக்கா இந்தியாவுடன் சண்டை போட்டது. ஆனால் அமெரிக்காவிற்கு இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் பெரிய அளவில் உதவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications