இந்தியாவில் 4367440 பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 3395926 பேர் டிஸ்சார்ஜ்
நாடு முழுவதும் கொரோனாவிற்கு 4367440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 3395926 பேர் குணமடைந்துள்ளனர்.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவிற்கு 4367440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 3395926 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 897573 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 73941 பேராக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

கொரோனா வைரஸ் என்னும் கொடிய அரக்கனால் உலக அளவில் 3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் 2 கோடி பேர் வரை மீண்டுள்ளனர்.
மருந்துகள் இல்லாத காரணத்தால் நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரித்து தொற்றுக்கு உள்ளானவர்களை விரைவில் கண்டறிந்து, தனிமைப்படுத்தி தகுந்த சிகிச்சை அளிப்பதே கொரோனாவில் இருந்து மீளும் ஒரே வழியாகும். எனவே உலக நாடுகள் அனைத்தும் தொடர்ந்து பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதில் குறியாக இருக்கின்றன.
இந்தியாவும் நாளுக்கு நாள் தனது பரிசோதனை வசதியை அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தொற்றுக்கு ஆளானவர்களை விரைவில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
நாடுமுழுவதும் தற்போது நாளொன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதிக்கும் திறனை இந்தியா பெற்றிருக்கிறது. அதன்படி நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10 லட்சத்து 98 ஆயிரத்து 921 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நாட்டில் நடத்தப்பட்டுள்ள பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 கோடியை கடந்து விட்டது.
இதுவரை 5 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரத்து 128 பரிசோதனைகள் நடந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனைக்காக நாடு முழுவதும் 1,668 பரிசோதனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் 1,035 ஆய்வகங்கள் அரசுக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கொரோனாவிற்கு 4367440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்த நிலையில் நேற்றைய தினம் 75ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டது சற்றே ஆறுதலை தருகிறது.
நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கையும் 3395926 ஆக அதிகரித்து உள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் 78 சதவீதமாகும். தற்போதைய நிலையில் 897573 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் அல்லது வீட்டு சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 73941 பேராக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா 2வது இடத்திலும் உள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications