இந்தியாவில் கொரோனாவிற்கு 68 லட்சம் பேர் பாதிப்பு - 58 லட்சம் பேர் மீண்டனர்
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68,32,988 பேராக அதிகரித்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68,32,988 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 58,24,462 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு 1,05,554 பேர் நாடு முழுவதும் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 9,02,972 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,63,76,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 27,393,733 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,059,915 பேராக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு 7,922,732 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனாவிற்கு 7,773,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 4,975,129 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவிற்கு 216,705 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள 25,81,323 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரையில் நாட்டில் 8 கோடியே 22 லட்சத்து 71 ஆயிரத்து 654 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரம் கூறுகிறது. கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தொடுவதற்கு 110 நாட்கள் ஆனது நினைவுகூரத்தக்கது. அதன் பின்னர் 10 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டுவதற்கு 59 நாட்கள் ஆனது. 20 லட்சத்தை ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி கடந்தது. 23ஆம் தேதி பாதிப்பு 30 லட்சத்தை கடந்தது.
கடந்த மாதம் 5ஆம் தேதி பாதிப்பு 40 லட்சம் கடந்தது. அடுத்த 11 நாளில் பாதிப்பு 50 லட்சம் தாண்டியது. மேலும் 12 நாளில் பாதிப்பு 60 லட்சத்தை கடந்துள்ளது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,32,988 பேராக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஒருபக்கம் அதிகரித்து வந்தாலும்கூட, அதற்கு இணையாக கொரோனாவில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கையும் இருக்கிறது என்பது தொடர்ந்து ஆறுதல் அளிக்கும் அம்சமாகவே உள்ளது. கொரோனாவில் இருந்து 58,24,462 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,05,554 ஆக உயர்ந்துள்ளது. இறப்புவிகிதம் 1.55 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதும் 9,02,972 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது மொத்த பாதிப்பில் இது 13.44 சதவிகிதம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications