Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா முழுக்க கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் ரத்து! 2 ஆண்டுக்கு பின் மத்திய அரசு அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலால் மத்திய அரசு வழிக்காட்டலில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மார்ச் 31ல் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படாது என மத்திய அரசு கூறியுள்ளது. இதன்மூலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக முடிவுக்கு வந்துள்ளன.

Recommended Video

    Indiaவில் Corona கட்டுப்பாடுகள் ரத்து! March 31ல் முடிகிறது | OneIndia Tamil

    இந்தியாவில் கொரோனா 3 அலைகளாக பொதுமக்களை தாக்கியுள்ளது. இதில் 5 லட்சத்துக்கும் அதிகமானர்கள் பலியாகி உள்ள நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் இந்தியா முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு அமலாகின. இதில் ஏராளமான மக்கள் பொருளாதாரத்தை இழந்து கஷ்டப்பட்டனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

     மாநிலங்களுக்கு கடிதம்

    மாநிலங்களுக்கு கடிதம்

    இந்நிலையில் தான் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கடிதத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

     நீட்டிக்க விரும்பவில்லை

    நீட்டிக்க விரும்பவில்லை

    "கொரோனாவை கட்டுப்படுத்த 2020 மார்ச் 24ல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (என்டிஎம்ஏ) வழிகாட்டுதலின் பேரில் மத்திய உள்துறை சார்பில் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் உத்தரவுகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. மேலும் கொரோனா தொடர்பாக 2022 பிப்ரவரி 25ல் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகள் மார்ச் 31ல் முடிவுக்கு வருகின்றன. பாதிப்பு தற்போது குறைந்துள்ளதால் இதை நீட்டிக்க விரும்பவில்லை. இருப்பினும் தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு மாஸ்க், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை சானிடைசரால் அடிக்கடி சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து கொள்ளலாம்'' என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

     நோய் உறுதி சதவீதம் குறைவு

    நோய் உறுதி சதவீதம் குறைவு

    மேலும், ‛‛இந்தியாவில் தற்போது 23,913 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளர். தினசரி நோய் உறுதி செய்யும் சதவீதம் 0.28 ஆக குறைந்துள்ளது. தற்போது வரை 181.56 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிக்கான வெற்றி'' என குறிப்பிட்டுள்ளார்.

     2 ஆண்டுகள்

    2 ஆண்டுகள்

    இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசின் கொரோனா வழிக்காட்டுதல் விதிமுறைகள் முழுவதுமாக முடிவுக்கு வந்துள்ளன. இந்தியாவில் 2020 மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்பு துவங்கியது. அன்று முதல் மத்திய உள்துறை அமைச்சர் வழிக்காட்டு நெறிமுறைகளை வழங்கி வந்தது. சுமார் 2 ஆண்டுகள் ஆன நிலையில் மத்திய அரசு அதனை கைவிடுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+