மே 15-ல் கொரோனா மோசமான உச்சத்தில் இருக்கும்.. மே இறுதியில் அடியோடு சரியும்.. விஞ்ஞானிகள் கணிப்பு!
டெல்லி: அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் கொரோனா வைரஸ் இந்தியாவில் புதிய உச்சத்தை தொடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதன்பின்னர் மே மாதம் இறுதியில் யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய சரிவை கண்டறியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிவேகமாக அதிகரித்து வருகிறது. தினமும் 3,00,000-க்கும் மேற்பட்ட தினசரி பாதிப்புகள், 2,500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

கொரோனா கோர முகம்
அனைத்து மாநிலத்திலும் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் இல்லை. மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு மகாராஷ்டிரா, டெல்லியில் தினமும் ஏராளமானோர் உயிரை பறித்து வருகிறது.

உச்சம் பெறும்
இந்த நிலையில் இந்தியாவில் மே மாதம் 15-ம் தேதிக்குள் கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும் என இந்திய விஞ்ஞானிகள் குண்டை தூக்கி போட்டுள்ளனர். இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது:- அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் கொரோனா வைரஸ் இந்தியாவில் உச்சத்தை தொடும். குறிப்பாக மே 11 மற்றும் 15 தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் 30 முதல் 35 லட்சம் வரையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரக்கூடும்.

டெல்லி நிலைமை பரிதாபமாகும்
டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் ஏப்ரல் 25 முதல் 30-ம் தேதிக்குள் புதிய பாதிப்புகள் அதிகம் காணப்படலாம். மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் ஏற்கனவே உள்ள பாதிப்புகள் புதிய உச்சத்தை எட்டலாம். கொரோனா இவ்வாறு மிகப் பெரிய உச்சம் பெறுவதற்கு பல்வேறு சாத்தியக்கூறுகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

வேகமாக சரியும்
அதே வேளையில் மே மாதம் நடுப்பகுதியில் உச்சம் பெறும் கொரோனா, அதன்பின்னர் மே மாதம் இறுதியில் யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய சரிவை கண்டறியும். இதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளானர். சூத்ரா மாதிரியின் கணிப்பு தினந்தோறும் ஏற்படக்கூடிய தொற்று எண்ணிக்கையை ஒத்துள்ளது . அதாவது நாளொன்றுக்கு ஒரு நபரால் எத்தனை நபருக்கு தொற்று பரவுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு இது கணிக்கப்படுகிறது. என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications