Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி வன்முறை.. பிரெஸ்மீட்டில் எந்த கேள்விக்கும் பதில் அளித்காத டெல்லி போலீஸ்.. இதுதான் பதில்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை 18 எப்ஐஆர்கள் போடப்பட்டுள்ளது என்றும் இந்த வன்முறையில் தொடர்புடைய 106 பேரை இதுவரை கைது செய்துள்ளோம் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கடந்த பிப்வரி 24ம் தேதி முதல் இன்று வரை நடந்த மோதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்ட்டுள்ளன. வடகிழக்கு டெல்லி பகுதிகளில் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Delhi violence: Police claim 18 FIRs and arrested 106 people so far in connection with the riots

டெல்லி போலீஸ் பிஆர்ஒ இந்த வன்முறை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர்கள் கூறுகையில், டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை 18 எப்ஐஆர்கள் போடப்பட்டுள்ளோம். இந்த வன்முறையில் தொடர்புடைய 106 பேரை இதுவரை கைது செய்துள்ளோம் என்றார்.

ஆனால் செய்தியாளர்களின் எந்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. அவர் சொல்லவந்ததை மட்டும் சொல்லிவிட்டு சென்றார். அவர் போகும் போது கடைசியாக பிரஸ் மீட்டில், "வரும் நாட்களில் இன்னும் பலர் கைது செய்யப்படுவார்கள். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+