மெகா ட்விஸ்ட்.. காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்.. திக் விஜய் சிங் இன்று விருப்பமனு தாக்கல்? பின்னணி
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு இன்று திக் விஜய் சிங் விருப்பமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஏகப்பட்ட குழப்பங்களுடன், அரசியல் மோதல்களுடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற இருக்கிறது.

என்ன எதிர்பார்ப்பு
71 வயது நிரம்பிய மூத்த தலைவரான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சோனியா ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர் நேரு குடும்பத்திற்கு நெருக்கமான தலைவர். ஆனால் அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. தான் பதவியை ராஜினாமா செய்தாலும் தனது ஆதரவாளர் மட்டுமே முதல்வர் ஆக வேண்டும் என்று இவர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

மிரட்டல்
அதோடு அவர் தனது ஆதரவு எம்எல்ஏக்களை தூண்டிவிட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இவர் முதல்வராகவும் இருக்கட்டும்.. தேசிய தலைவராகவும் இருக்கட்டும் என்று ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் தெரிவித்து வருகின்றனர். 90 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய போவதாக காங்கிரஸ் தரப்பு மிரட்டி உள்ளனர். எம்எல்ஏக்கள் இப்படி போர்க்கொடி தூக்குவதற்கும்.. தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அசோக் கெலாட் கூறி விட்டார். இருந்தாலும் அவர்தான் சச்சின் பைலட்டுக்கு எதிராக எம்எல்ஏக்களை தூண்டி விடுகிறார் என்று கூறப்படுகிறது.

வேண்டாம்
இந்த மோதல் காரணமாக அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு இன்று திக் விஜய் சிங் விருப்பமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அசோக் கெலாட் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் திக் விஜய் சிங் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 1993 முதல் 2003 இவர் மத்திய பிரதேச முதல்வராக இருந்துள்ளார்.

முதல்வர்
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். தற்போது ராஜ்ய சபா எம்பியாக இருக்கிறார். காங்கிரசின் டாப் தலைவர்களுக்கு இவர் நெருக்கம். ராகுல் காந்தியுடன் இவர் பாரத் ஜோடோ யாத்திரையில் கேரளாவில் இருந்தார். இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அவர் டெல்லி வந்துள்ளார். நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இன்று அவர் டெல்லியில் வேட்புமனுவை வாங்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications