டோல்கேட்ட எப்ப சார் மூடுவீங்க? சொன்னீங்களே! செஞ்சீங்களா? நாடாளுமன்றத்தில் கொந்தளித்த செந்தில்குமார்
டெல்லி: 60 கிலோ மீட்டருக்கு இடையில் உள்ள சுங்க சாவடிகள் அடுத்த 3 மாதங்களில் அகற்றப்படும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தே 9 மாதங்கள் ஓடிவிட்டதாக மக்களவையில் திமுக எம்பி செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், லோக் சபாவில் கேள்வி நேரத்தின்போது தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உரையாற்றினார்.

3 மாதங்களுக்கு எத்தனை நாட்கள்?
அப்போது, 60 கிலோ மீட்டருக்கு இடையிலான தூரத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் சுங்கச் சாவடிகள் 3 மாதங்களில் மூடப்படும் என உறுதியளித்தார். ஆனால், 3 மாதங்கள் முடிவடைந்து 9 மாதங்கள் ஆகிவிட்டது. மத்திய பாஜக அரசு மூன்று மாதங்களில் எத்தனை நாட்கள் உள்ளதாக கணக்கிட்டு வருகிறது?

தமிழ்நாட்டில் அதிக டோல்கேட்டுகள்
தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அதிக அளவிலான சுங்கச் சாவடிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 57 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கணக்கிட்டு பார்த்தால் தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளின் மொத்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்து இருக்கும்.

சட்டப்பட்டி எத்தனை இருக்கலாம்?
ஆனால், சட்ட விதிகளின்படி தமிழ்நாட்டில் 16 சுங்கச் சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். சேலம் - உளுந்துர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை எண் 79 ல் மட்டும் 11 ஆண்டுகளாக 3 டோல்கேட்டுகள் இயங்கு வருகின்றன. தமிழ்நாட்டில் 27 இடங்களில் நான்கு வழிச்சாலைகள் திடீரென இருவழிச் சாலைகளாக மாற்றம் செய்யப்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

சட்டவிரோதமாக பண வசூல்
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான சுங்கச் சாவடிகளில் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்படுகிறது. 100 மீட்டர் என்ற விதி சுங்கச் சாவடிகளில் கடைபிடிக்கப்படுவது கிடையாது. இடைவெளியில் காத்திருக்கும் வாகனங்களுக்கு பணம் செலுத்த தேவையில்லை என்ற விதியையும் கடைபிடிப்பது கிடையாது.

நீண்ட வரிசையில் வாகனங்கள்
குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் நெடும் வரிசையில் வாகனங்கள் காத்து இருக்கின்றன. சுங்கச் சாவடிகள் இதனை கண்டுகொள்ளாமல் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் 10 வினாடி என்ற விதியையும் 100 மீட்டர் விதியையும் அனைத்து சுங்கச் சாவடிகளும் கடைபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என்றார்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications