Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் காலகட்டத்தில் ரூ.8,889 கோடி பறிமுதல்! குஜராத்தில்தான் அதிகம்! லிஸ்டில் அடுத்து எந்த மாநிலம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தாண்டு தேர்தல் காலகட்டத்தில் ரூ.8,889 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றி உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட மொத்த பொருட்களில் சுமார் 45 சதவீதம் போதைப் பொருட்கள் என்பதும் கவலையளிக்கும் விஷயமாகும்.

நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்களில் மொத்தம் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளன. எஞ்சிய தொகுதிகளுக்கு மே 20, மே 25 மற்றும் ஜூன் 1ஆம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

Election-Time Seizures Reach Rs 8 889 Crore with Gujarat having the most

லோக்சபா தேர்தல் காரணமாகப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அதேநேரம் தேர்தல் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக ரெய்டுகளையும் நடத்தி வருகிறது.

தேர்தல் ஆணையம்: இதற்கிடையே இந்த லோக்சபா தேர்தல் காலகட்டத்தில் எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்துத் தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் ரூ.8,889 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. விரைவில் தேர்தல் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பறிமுதல்கள் ரூ.9,000 கோடியைத் தாண்டும் என்றும் தேர்தல் முடியும் வரை இதுபோன்ற ரெய்டுகள் தொடரும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

45% போதைப்பொருள்: இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் தனது செய்திக்குறிப்பில், "தேர்தல் காலகட்டத்தில் ரூ.3,958 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது இதுவரை செய்யப்பட்ட பறிமுதல்களில் 45% ஆகும். ரெய்டில். போதைப் பொருட்கள் சிக்குவது அதிகரித்துள்ளது. கண்காணிப்பு மற்றும் ரெய்டு என கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் எடுக்கப்பட்ட தீவிரமான நடவடிக்கை காரணமாகவே இந்தளவுக்குப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

இந்த போதைப்பொருள், மதுபானம் உள்ளிட்டவை தேர்தல் செயல்முறையை நேரடியாகப் பாதிக்கிறது. இதன் காரணமாகவே, போதைப் பொருட்களைக் கைப்பற்றுவதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம். எந்த பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எவ்வளவு: தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, மொத்தம் ரூ. 8889 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் வெறும் 849 கோடி ரூபாய் தான். அதேநேரம் 814 கோடி ரூபாய் மதிப்பிலான 5.39 கோடி லிட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தவிர ரூ. 1260 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2006 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பொருட்கள் உள்ளிட்ட மற்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

எங்கு அதிகம்: மாநிலம் வாரியாக பார்க்கும் போது இந்த லோக்சபா தேர்தலில் குஜராத்தில் மட்டும் ரூ.1,461.73 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் இருந்து ரூ.1,132.82 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மற்ற மாநிலங்களிலும் கூட இந்த முறை அதிகப்படியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நொய்டா போலீசார் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மருந்து தொழிற்சாலையில் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள 26.7 கிலோ எம்டிஎம்ஏ போதைப்பொருளைக் கைப்பற்றினர். இந்த விவகாரத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 75 ஆண்டுக்கால மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இந்தளவுக்கு ரொக்கம், பொருட்கள் கைப்பற்றப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+