2021 இறுதிக்குள்.. இந்தியாவில் எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி- உச்சநீதிமன்றத்தில் சொன்ன மத்திய அரசு
டெல்லி: 2021 இறுதிக்குள் நாட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட பெஞ்ச் அமர்வு, மத்திய அரசின் கொரோனா வேக்சின் கொள்கை தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தார். ஃபைசர் போன்ற நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும், அது வெற்றியடைந்தால், தடுப்பூசி முடிப்பதற்கான காலக்கெடு மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வெவ்வேறு வயதினருக்கான தடுப்பூசி விநியோகத்தில் முரண்பாடு இருப்பது உள்ளிட்ட சில சிக்கல்கள்தான் தடுப்பூசி பணிகளை வேகமாக செயல்படுத்த முடியாததன் காரணம் என்று, துஷார் மேத்தா தெரிவித்தார்.
மத்திய அரசு தரப்பு இவ்வாறு கூறினாலும், நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. எனவே 2021 இறுதிக்குள் எப்படி எல்லோருக்கும் தடுப்பூசி போடப்படும் என்ற கேள்விகள் எழுகின்றன. ஃபைசர் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசி நிறுவனங்களும் ஏற்கனவே தங்களது உற்பத்தியை வழங்குவதாக ஒப்பந்தம் போட்டுள்ளதால், புதிதாக அதிகப்படியாக இந்தியாவுக்கு வழங்க முடியாத நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications