அனல் பறக்கும் அதிமுக.. அப்போ இரட்டை இலை யாருக்குமே இல்லையா? முடங்கும் சின்னம்? எடப்பாடியால் அம்பலம்
டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதில் தலைமை தேர்தல் ஆணையம் உறுதியாக இருப்பதையே உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கோஷ்டி தாக்கல் செய்த முறையீடு வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எப்படியும் போட்டியிடுவது என்பதில் அதிமுக இபிஎஸ் கோஷ்டி உறுதியாக உள்ளது. இபிஎஸ் கோஷ்டி வேட்பாளரை இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால் 106 பேர் கொண்ட பிரம்மாண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது. அதிமுகவின் ஓபிஎஸ் அணியும் வேட்பாளரை இறக்குவது தொடர்பாக நல்ல நாள், நேரம் பார்த்து கொண்டிருக்கிறது.

அதிமுக இபிஎஸ் அணியின் சார்பில் கேவி ராமலிங்கம் அல்லது தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இபிஎஸ் அணி வேட்பாளரை அறிவிக்காமல் தாமதித்து வருகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் அணி ஒரு முறையீடு செய்துள்ளது. அதில், தேர்தல் ஆணையமானது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தாம் என்பதை ஏற்க மறுக்கிறது. வேட்பாளரின் விண்ணப்பத்தில் தாம் இடைக்கால பொதுச்செயலாளர் என கையெழுத்திட்டால் அதை ஏற்க முடியாது என்கிறது. இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதுதான் இபிஎஸ் தாக்கல் செய்திருக்கும் முறையீடு. மேலும் தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதும் இபிஎஸ் மனுவின் மற்றொரு முக்கிய கோரிக்கை.
அதாவது அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி வேட்பாளரை நிறுத்தினால் ஓபிஎஸ் கோஷ்டியும் வேட்பாளரை நிறுத்தும். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி, வேட்பு மனுவில் கையெழுத்திடுவார்; அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திடுவார். இதனடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை இருவருமே உரிமை கோருவர்.
ஏற்கனவே யார் உண்மையான அதிமுக என்பதை தீர்மானிக்கக் கூடிய, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி முதல் வாரத்தில்தான் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தாக வேண்டும். இதனால் உச்சநீதிமன்றத்தில் இன்று இபிஎஸ் தரப்பு முறையிட்டது. ஆனால் வரும் திங்கள்கிழமையன்று முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தற்போது இபிஎஸ் தரப்பு, உச்சநீதிமன்றத்தை அணுகியிருப்பதன் மூலம் ஒரு விவகாரம் தெளிவாகி இருக்கிறது. அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் இருதரப்பையும் தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இருதரப்பும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை சிலை சின்னம் கோரினாலோ அல்லது ஒருதரப்பு உரிமை கோரினாலோ அதிமுக தேர்தல் சின்னமாகிய இரட்டை இலையை தேர்தல் ஆணையம் யாருக்கும் தராது; இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைக்கும்; உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் வெல்லும் கோஷ்டிக்கு இரட்டை இலை சின்னம் தரும் என்பதுதான் இப்போதைய நிலைமை.
அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அக்கட்சி ஜானகி, ஜெயலலிதா தலைமையில் இரு அணிகளாக உடைந்தது. அப்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதேபோல் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் இரட்டை சிலை சின்னம் முடக்கப்பட்டது. ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கொடுக்கப்படவில்ல. தற்போது மீண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications