"என் பேத்திக்கு போய் நான் எப்படி.." பாலியல் புகாரால் உத்தரகண்ட் அரசியல்வாதி தற்கொலை.. நடந்தது என்ன
டெல்லி: பாலியல் புகாருக்கு உள்ளான உத்தரகண்ட் அரசியல்வாதி அனைவருக்கும் முன்னிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ராஜேந்திர பகுகுணா. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த 2004-05 காலகட்டத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
சாலை போக்குவரத்துத் துறையில் தொழிற்சங்கத் தலைவரான இவர், ஹல்த்வானி டிப்போ பணிமனையில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

உத்தரகண்ட் அரசியல்வாதி
59 வயதாகும் இந்த ராஜேந்திர பகுகுணா தான், கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 26) வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி, தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேத்திக்கு ராஜேந்திர பகுகுணா பாலியல் தொந்தரவு அளிப்பதாக அவரது மருமகள் புகார் அளித்த மூன்று நாட்களில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சமாதானம் முயற்சி
ராஜேந்திர பகுகுணா ஹல்த்வானியில் உள்ள தனது வீட்டிலிருந்து அவசர தொடர்பு எண்ணான 112இன் மூலம் போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார். அவர்களிடம் தனது தற்கொலைத் திட்டம் குறித்து போலீசாரிடம் விளக்கி உள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தண்ணீர் தொட்டி மேலே நின்று கொண்டிருந்த ராஜேந்திர பகுகுணாவை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். இருப்பினும், அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார்
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி பங்கஜ் பட் கூறுகையில், "அவர் தனது மருமகளின் குற்றச்சாட்டால் மிகவும் வருத்தப்பட்டார். தண்ணீர் தொட்டியில் இருந்த அவரை ஸ்பீக்கர் பயன்படுத்தி சமாதானம் செய்ய முயன்றோம். ஆனால், அதை அவர் கேட்கவில்லை. தன் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகவே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டு இருந்தார்" என்று தெரிவித்தார்.

வழக்குப்பதிவு
முன்னதாக அவரது மருமகளின் புகாரின்படி பகுகுணா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின், ஒரு கட்டத்தில் அவர் கீழே இறங்கி வருவது போல இருந்தது. இருப்பினும், திடீரென அவர் நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் அஜய் பகுகுணாவின் புகாரின் பேரில், அவரது மருமகள், மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications