Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரும் ஆனா வராது! கொரோனா 4வது அலைக்கு வாய்ப்பிருக்கு.. ஆனாலும் ஆபத்து இல்லை! நிபுணர் தரும் விளக்கம்.!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : இந்தியாவில் கடந்த இரு வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 4வது அலைக்கு வாய்ப்பிருந்தாலும் அது ஆபத்தானதாக இருக்காது என நிபுணர்கள் கூறியுள்ளது சற்றே நிம்மதி அளிக்கும் வகையில் உள்ளது.

கொரோனா 3வது அலையின் காரணமாக கடந்த ஜனவரி மாதத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை திடீரென உச்சமடைந்த நிலையில், அடுத்தடுத்த வாரங்களிலேயே உச்சமடைந்து பின்னர் மீண்டும் சரிவை நோக்கிச் சென்றது.

தடுப்பூசி மற்றும் மத்திய மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தினசரி பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா 4வது அலைக்கு வாய்ப்புள்ளதாக கான்பூர் ஐஐடி நிபுணர்கள் கூறினர்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்நிலையில் இந்தியாவில் இப்போது இரண்டு வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 24 அன்று, நாட்டில் 2,593 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பட்டனர். டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு, இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுகள் 90% அதிகரித்தது.

கொரோனா 4வது அலை

கொரோனா 4வது அலை

டெல்லி மற்றும் ஹரியானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் நான்கு நாட்களுக்குப் பிறகு மாநிலத்தின் பாதிப்பு குறித்த விவரங்களை பகிர்வதால் இந்த திடீர் உயர்வு இருப்பதாக கூறப்பட்டாலும், இந்தியாவில் ஓமிக்ரானின் பிஏ.2 மாறுபாட்டின் ஆதிக்கத்தின் நாட்டில் நான்காவது அலை ஏற்படலாம் நிபுணர்கள் கவலை தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் டெல்டா மாறுபாட்டால் ஏற்பட்ட கொரோனா அலையை போலவே தற்போதைய சூழ்நிலையில் பதிப்பை பிஆ2 வைரஸ் ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தீவிரமானது அல்ல

தீவிரமானது அல்ல

மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் மற்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட காரணிகளின் விளைவாக சமீபத்திய நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கிரீன் டெம்பிள்டன் கல்லூரி பேராசியர் டாக்டர் ஷாஹித் ஜமீல் இதுகுறித்து கூறுகையில், "டெல்டாவுடன் ஒப்பிடக்கூடிய புதிய அளவுக்கு 4வது அலையை நாம் பார்க்கபோவதிலை, இப்போது நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் அடிப்படையில் வேறுபட்டவை அல்ல. ஓமிக்ரான் ஏற்கனவே நாட்டில் நிறைய நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தியுள்ளது. XE மாறுபாடு கூட Omicron ஐ விட தீவிரமானது அல்ல என கூறியுள்ளார்.

தடுப்பூசி எண்ணிக்கை

தடுப்பூசி எண்ணிக்கை

"பிஏ.2 மாறுபாடு ஓமிக்ரானை விட 2-20% அதிக பரவும் தன்மை கொண்டதாகும். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படாததும், பெரும்பாலான மாநிலங்கள் தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன. இந்த காரணிகள் அனைத்தும் நோய் பாதிப்பு அதிகரிக்க காரணமாக உள்ளன. இரண்டு வருட கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசிகளுக்குப் பிறகு, தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று மக்கள் நினைத்துக் கொள்வதும் ஆபத்துக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். எனவே நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Recommended Video

    புதுச்சேரி: விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா...மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா சிகிச்சை மையம்!
    ஓமிக்ரான் வகை

    ஓமிக்ரான் வகை

    அசோகா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் உயிரியல் பேராசிரியரான கௌதம் மேனன், ஒவ்வொரு பெரிய அலையும் ஒரு குறிப்பிட்ட வைரஸ் மாறுபாட்டுடன் தொடர்புடையது என்று சுட்டிக்காட்டுகிறார். அசல் ஆல்பா மாறுபாடு, டெல்டா மற்றும் பின்னர் ஓமிக்ரான் வகைகள் கொரோனா அதிகரிப்பை ஏற்படுத்தியது. ஓமிக்ரானும் மிகவும் பரவக்கூடியது. தவிர, பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு சக்தியைக் பெற்றுள்ளனர். ஆனாலும் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றாலும், நோய்த்தொற்று ஏற்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன என்று கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+