170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் இருந்ததால் பட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்- துஷார் மேத்தா

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவகாசமா?.. பாஜகவுக்கு கபில் சிபல் நறுக்

    டெல்லி: பாஜக, என்சிபி மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் இருந்ததால்தான் பட்னாவிஸை ஆளுநர் கோஷ்யாரி ஆட்சி அமைக்க அழைத்தார் என உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

    மகாராஷ்டிராவின் புதிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பட்னாவிஸூக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம் மற்றும் பட்னாவிஸுக்கு ஆதரவு தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் கடிதம் ஆகியவற்றை சீலிட்ட கவரில் அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    Fadnavis-Pawar Govt had support of 170 MLAs, says Tushar Mehta

    பின்னர் தமது வாதத்தை முன்வைத்த போது, அனைத்து என்சிபி எம்.எல்.ஏக்களும் அஜித்பவாரை சட்டசபை குழு தலைவராக நவம்பர் 22-ல் தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை ஆளுநரிடம் அவர் கொடுத்தார். பாஜகவுக்கு 54 என்.சி.பி. எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவதாக கையெழுதிட்ட கடிதத்தையும் ஆளுநரிடம் அஜித் பவார் அளித்தார்.

    பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஆதரவு இருந்ததால்தான் பட்னாவிஸை ஆளுநர் கோஷ்யாரி ஆட்சி அமைக்க அழைப்பும் விடுத்தார். இவ்வழக்கில் ஆளுநரை ஒருதரப்பாக சேர்க்க முடியாது.

    ஆளுநரின் செயலாளர் தரப்பில் வாதங்களை முன்வைக்கிறேன். 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தததால்தான் பட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததாக ஆளுநர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+