1990 முதல் 2020மாவது வருடத்திற்குள் வேலை பார்த்தவர்கள் அரசிடம் ரூ.1.20 லட்சம் பெறலாமா? உண்மை இதுதான்
டெல்லி: கடந்த 30 வருட காலத்திற்குள் ஏதாவது ஒரு பணியிலுள்ள தொழிலாளர்களுக்கு அரசு ரூ.1.20 லட்சம், நிதி உதவி வழங்கும் என்று, ஒரு மெசேஜ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது. இந்த மெசேஜை நம்பாதீர்கள் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உங்களுக்கு கூட இதுபோன்ற மெசேஜ் வந்திருந்தால் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவும். யாருக்கும் ஃபார்வேர்ட் செய்துவிடாதீர்கள்.

1990 முதல் 2020ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திலிருந்து ரூ .1.20 லட்சம் பெற உரிமை உண்டு என்று அந்த போலி செய்தி கூறுகிறது. அந்த தகவலுடன் ஒரு URL உள்ளது, பயனர்கள் தங்கள் பெயர்கள் பட்டியலில் இருக்கிறதா என்று சோதிக்க அதைக் கிளிக் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறது அந்த மெசேஜ்.
இது ஒரு போலி செய்தி. அத்தகைய அறிவிப்பு எதுவும் அரசால் வெளியிடப்படவில்லை. எனவே, தயவுசெய்து அத்தகைய URLகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிதி பேக்கேஜ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எந்த துறைக்கு எவ்வளவு என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். நேற்று, இன்று என அவர் வரிசையாக செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். மற்றபடி, மேலே குறிப்பிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதை போல, தனி நபர்கள், தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications