ஈரோடு கிழக்கில் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்.. தேர்தல் ஆணையத்தில் சி.வி. சண்முகம் பகீர் புகார்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புகார் அளித்துள்ளது.
டெல்லி: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக பல்வேறு முறைகேடுகளை செய்து வெற்றி பெற முயற்சி செய்வதாக தலைமைத் தேர்தலை ஆணையரை சந்தித்து அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புகார் அளித்துள்ளது. இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்காமல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவப்பிரசாத் , தேமுதிக சார்பில் ஆனந்த் , நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் தான் இரட்டை இலை சின்னத்தை முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த சி.வி. சண்முகம் புதிய புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் புதிய வாக்காளர் பட்டியலை தயாரித்து மத்திய பாதுகாப்பு படை துணையுடன் நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், இடைத்தேர்தலை நடத்த 6 மாத காலம் அவகாசம் இருக்கும் போது அவசரம் அவசரமாக தேர்தலை நடத்துவது ஏன். வாக்காளர் பட்டியலில் உள்ள பல பேர் அந்த தொகுதியிலேயே இல்லை. 5 ஆயிரம் வாக்காளர்கள் உயிரிழந்து விட்டனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் பட்டியலில் உள்ளன. இது எல்லாமே அங்கு தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரியும்.
ஆளும் திமுக அரசு சொல்வதைத்தான் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேர்மையாக தேர்தல் நடைபெறாது. குண்டர்களை வைத்து இல்லாத வாக்காளர்களின் வாக்குகளை பதிவு செய்ய முயற்சி செய்வார்கள். நேர்மையாக தேர்தல் நடைபெற ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும். காவல்துறையினர் இல்லாமல் மத்திய பாதுகாப்பு படையினர் துணையுடன் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்து சி.வி. சண்முகம் புகார் அளித்த அதே நேரத்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் 2 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையுடன் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications