தென்னிந்தியாவிற்கு குறி.. பெங்களூரில் மாபெரும் விவசாய போராட்டத்தை நடத்த திட்டம்.. டிராக்டர் பேரணி!
டெல்லி: டெல்லி எல்லையில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் 100 நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டம் செய்து வருகிறார்கள். பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி வந்துள்ளனர்.

சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் பகுதியில் இவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் நடந்து வரும் இந்த விவசாயிகள் போராட்டம் நாட்டையே உலுக்கி உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நீண்ட போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்தில் நேற்று நடந்த மகாபஞ்சாயத்து கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எட்டப்பட்டன. அதன்படி டெல்லி மட்டுமின்றி மற்ற மாநிலங்களுக்கும் இந்த போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தில் விவசாயிகள் உள்ளனர். இதுகுறித்து பேசிய விவசாய போராட்ட குழு தலைவர் ராகேஷ் திகாய்த்.. இந்த போராட்டத்தை கைவிட கூடாது.. 3 சட்டங்களை நீக்கும் வரை இதை தொடர வேண்டும். இதை தென் இந்தியாவில் விரிவுபடுத்த வேண்டும்.
முக்கியமாக கர்நாடகா விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அவர்கள் டிராக்டரில் தங்கள் கிராமங்களில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டும். பெங்களூரை இன்னொரு டெல்லியாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.
பெங்களூர் எல்லையை சுற்றி போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் .. டிராக்டர் பேரணி மேற்கொள்ள வேண்டும் என்று ராகேஷ் கூறியுள்ளார். கர்நாடக விவசாயிகள் முன் பேசும் போது இவர் இப்படி குறிப்பிட்டார்.
இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களுக்கு இந்த போராட்டத்தை விரிவுபடுத்தும் திட்டத்தில் விவசாயிகள் சங்கம் உள்ளது. விரைவில் பெங்களூரில் விவசாயிகள் போராட்டம் வெடிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications