பட்ஜெட் "லீக்".. மாற்றப்பட்ட பிரிண்டிங் இடம்.. ஆஹா இப்படி எல்லாம் கூட நடந்துச்சா? சுவாரசிய சம்பவம்
சுதந்திர இந்தியாவில் முதல் பட்ஜெட் 1947ல் நவம்பர் 26ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது
டெல்லி: 2023-24 ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இதற்கு முன் பட்ஜெட்டில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை பார்க்கலாம்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிதியமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து அவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இது. இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2023- 2024ல் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நடக்கும் 2022-2023 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 ஆக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த நிதி ஆண்டில் இது 6-6.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

சுவாரசிய சம்பவம்
2023-24 ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இதற்கு முன் பட்ஜெட்டில் நடத்த சில சுவாரசியமான சம்பவங்களை பார்க்கலாம். மத்திய பட்ஜெட் முதல்முறை தாக்கல் செய்யப்பட்டது.. அதாவது ஒருங்கிணைந்த இந்தியாவில் முதல்முறை பட்ஜெட் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 1860ல் ஏப்ரல் 7ம் தேதி ஸ்காட்லாந்தை சேர்ந்த பொருளாதார நிபுணர், வர்த்தகம் ஜேம்ஸ் வில்சன் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. அவர் கிழக்கிந்திய கம்பனியில் பணியாற்றியவர். அப்போது இந்தியாவின் வருவாய் என்பது சொத்து வரி, தொழில் வருமானம், பாதுகாப்பு வரி, பென்சன் வருவாய் ஆகியவை மூலம் வருவாய் பெறப்பட்டது.

முதல் பட்ஜெட்
சுதந்திர இந்தியாவில் முதல் பட்ஜெட் 1947ல் நவம்பர் 26ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை ஆர்கே ஷண்முகம்ஷெட்டி தாக்கல் செய்தார். அப்போது அவர்தான் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தார். ஆர்கே ஷண்முகம்ஷெட்டி தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியாவின் நிதி நிலை அறிக்கையை 22 முறை தமிழர்கள் தாக்கல் செய்துள்ளனர். முதல் பட்ஜெட் சுதந்திர இந்தியாவில் 5 மணிக்கு மாலை தாக்கல் செய்யப்பட்டது. 1999 வரை பிப்ரவரி மாதம் கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

பட்ஜெட் லீக்
சுதந்திர இந்தியாவில் முதல் பட்ஜெட் 1947ல் நவம்பர் 26ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை ஆர்கே ஷண்முகம்ஷெட்டி தாக்கல் செய்தார். அப்போது அவர்தான் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தார். ஆர்கே ஷண்முகம்ஷெட்டி தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியாவின் நிதி நிலை அறிக்கையை 22 முறை தமிழர்கள் தாக்கல் செய்துள்ளனர். முதல் பட்ஜெட் சுதந்திர இந்தியாவில் 5 மணிக்கு மாலை தாக்கல் செய்யப்பட்டது. 1999 வரை பிப்ரவரி மாதம் கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

நிர்மலா சீதாராமன்
2019ல் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அதற்காக எப்போதும் கொண்டு வரப்படும் ப்ரீப் கேஸை கொண்டு வரவில்லை. மாறாக துணியில் உருவாக்கப்பட்ட ஒரு சிவப்பு நிற பையில், இந்திய தேசிய சின்னம் பொருந்திய பையை பயன்படுத்தினார். இந்த வருடம் டேப்லெட் வைக்கும் பேக் ஒன்றை பயன்படுத்தி உள்ளார். இதுவும் சிவப்பு நிறத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2021 வரை பட்ஜெட்டில் பேப்பர் பயன்படுத்தப்பட்டு வந்தது. 2021ல் பட்ஜெட்டில் மொத்தமாக பேப்பர் புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications