அனைத்து மக்களையும் ஒருங்கிணைப்பதற்கு பெயர்தான் ஹிந்துத்துவா: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
டெல்லி: இந்துத்துவம் என்ற கொள்கை அனைவரையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வதுதான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
இந்துத்துவா என்ற பெயரில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைக்கும் நிலையில் மோகன் பகவத் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டசுமார் 150 பங்கேற்பாளர்கள் உடன் குஜராத்தில் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் மோகன் பகவத் இவ்வாறு பேசியிருக்கிறார்.

அனைவரும் நன்கு வாழ வேண்டும்
இதோ அவரது பேச்சிலிருந்து.. அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வதற்கு பெயர்தான் இந்துத்துவா. அனைத்து மக்களும் வளமாக வாழ வேண்டும் என்று நினைப்பது இந்துத்துவா. தடைகளை அகற்றும் போது சில நேரங்களில் முரண்பாடு மோதல் வரலாம். ஆனால் அது தான் இந்துத்துவா என்று சொல்லுவது சரி கிடையாது.

அதிகாரம் தேவை
இந்துத்துவா என்பதற்கான விளக்கம் இது. அதேநேரம் இந்துக்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். தடைகளை அகற்ற வேண்டும் என்றால் நம்மிடம் அதிகாரம் இருக்க வேண்டும். நாம் மேலும் சக்தி மிக்கவர்களாக மாறவேண்டும். நாம் சக்தி மிக்கவர்களாக அல்லது பலம் மிக்கவர்களாக மாற வேண்டும் என்று சொல்வது கொடுங்கோன்மை என்பதை பற்றி கிடையாது. நமது கலாச்சாரம் மற்றும் மதத்தை பாதுகாக்க சக்தி மிக்கவர்களாக மாறவேண்டும்.

பொதுவான கலாச்சாரம்
ஒரு நாடு என்பது பொதுவான கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களால் ஒன்றிணைக்கப்பட்ட மக்களைக் கொண்ட பொது நோக்கம் கொண்டது ஆகும். இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார். செவ்வாய்கிழமை காலை மோகன் பகவத் குஜராத் வருகை தந்தார். அவர் பிரபலமான நபர்கள் மற்றும் உள்ளூர் தொழில் அதிபர்கள் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். குஜராத்தில் பூபேந்திர பாட்டில் முதல்வராக பங்கேற்ற பிறகு இப்போதுதான் முதல் முறையாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அந்த மாநிலத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

முதல் முறை சுற்றுப் பயணம்
குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி மாற்றப்பட்டு அங்கு பூபேந்திர பாட்டில் புதிய முதல்வராக 2 வாரங்கள் முன்பு பதவியேற்றார். குஜராத் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சரை மாற்றியது பாஜக தலைமை. இறந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் மோகன் பகவத் அந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications