சிறப்பாக செயல்பட்ட திருப்தியுடன் விடைபெறுகிறேன் - சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே உருக்கம்
இந்திய தலைமை நீதிபதி (CJI) பதவியிலிருந்து விடைபெறும் எஸ்.ஏ.போப்டே இன்று உச்சநீதிமன்றத்தில் இருந்து, தனது சிறந்ததைச் செய்த திருப்தியுடன் மகிழ்ச்சி, மனதிற்கு பிடித்த நினைவுகளுடன் வெளியேறுவதாகக் கூறினார்.
டெல்லி: நான் என்னால் முடிந்ததைச் செய்தேன் என்ற திருப்தியுடன் நான் புறப்படுகிறேன் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே கூறியுள்ளார். 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிடம் நான் செங்கோலை ஒப்படைக்கிறேன். அவர் நீதிமன்றத்தை மிகவும் சிறப்பாக வழிநடத்துவார் என்று நான் நம்புகிறேன் என்றும் பாப்டே உருக்கமாக தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இரண்டு ஆண்டு காலம் தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ். ஏ பாப்டே இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி தீர்ப்பு உட்பட பல முக்கிய வழக்குகளின் வாதங்களை கேட்டு தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி போப்டே, 2019 நவம்பரில் 47 வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். கொரோனா தொற்றுநோய்களின் போது வீடியோ கான்பரன்சிங் மூலம் உச்ச நீதிமன்றம் கொரோனா காலத்திலும் தொடர்ந்து செயல்படுவதை அவர் உறுதி செய்தார்.
இன்று பணி ஓய்வு பெறும் எஸ் ஏ. பாப்டேவிற்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவில் அவர், உணர்ச்சி பெருக்குடன் பேசினார். கடைசி நாளில் கலவையான உணர்வுகள் என்னுள் ஏற்படுத்தியுள்ளது. அதை என்னால் விவரிக்க முடியாத அளவிற்கு கடினமாக உள்ளது. இதுவரை நான் இதுபோல உணர்ந்ததில்லை.
இந்த நீதிமன்றத்தில் இதுவரை நான் சிறப்பாக மன நிறைவுடன் செயல்பட்டேன். பார் கவுன்சிலில் மட்டுமல்லாது வழக்கறிஞர்களுடன் சிறப்பாக செயல்பட்டேன். அருமையான வாதங்கள், சிறந்த தீர்ப்புகள் என அனைவரிடமும் நல்லெண்ணத்துடன் நடந்து கொண்டேன் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன்.
நீதிபதியாக 21 ஆண்டுகளுக்குப் பிறகு தான் பதவியில் இருந்து விலகுவதாகவும், இது உச்ச நீதிமன்றத்தில் தனது மிகச்சிறந்த அனுபவமாகவும், சகோதர நீதிபதிகளுடனான நட்புறவு அருமையாகவும் இருந்தது என்றும் தெரிவித்தார்.
நான் என்னால் முடிந்ததைச் செய்தேன் என்ற திருப்தியுடன் நான் புறப்படுகிறேன். 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிடம் நான் செங்கோலை ஒப்படைக்கிறேன். அவர் நீதிமன்றத்தை மிகவும் சிறப்பாக வழிநடத்துவார் என்று நான் நம்புகிறேன் என்று பாப்டே உருக்கமாக தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications