நான் யாருக்குமே அச்சப்படமாட்டேன்-என்னை தொடக் கூட முடியாது.. என்னை சுட்டுக் கொல்லட்டும்-ராகுல் ஆவேசம்
டெல்லி: தாம் பிரதமர் மோடிக்கோ அல்லது வேறு யாருக்குமே அச்சப்பட மாட்டேன்.. என்னை யாராலும் தொட முடியாது.. என்னை சுட்டுக் கொன்றால் கொல்லட்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.
அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியில் சீனா புதிய கிராமம் ஒன்றை கட்டி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ட்விட்டரில் ராகுலை விமர்சித்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்கள் குறித்த கையேடு ஒன்றை வெளியிட்டார் ராகுல் காந்தி. அப்போது செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:
புதிய விவசாய சட்டங்கள் தேசத்தின் விவசாய துறையை அழிக்கக் கூடியது. டெல்லியில் போராடும் விவசாயிகளை நான் 100% ஆதரிக்கிறேன். இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள்.. எங்களுடன் இணைந்து நிற்கின்றனர்.
விவசாயிகளுக்கு உண்மை நிலவரம் என்ன என்பது தெரியும். ராகுல் காந்தி என்ன செய்கிறார் என்பது விவசாயிகளுக்கும் தெரியும். என் மீது எந்த புகாரும் இல்லை. நான் பிரதமர் மோடிக்கோ அல்லது வேறு யாருக்குமோ பயப்படமாட்டேன். என்னை யாரும் தொடக் கூட முடியாது..அவர்களால் என்னை சுட்டுக் கொல்லத்தான் முடியும்.
நான் தேசபக்தி கொண்டவன். இந்த தேசத்தை நான் பாதுகாக்கக் கூடியவன். அவர்களைவிட நான் தேசபக்தியில் தீவிரமானவன். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications