வாரிசுகளை அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன்... பிரியங்கா காந்தி சொல்கிறார்
லக்னோ: எனது குழந்தைகளை அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன். ஆனால் எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்று உத்தரபிரதேசம் (கிழக்கு) காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
7 வது மற்றும் கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தனித்தனியே செய்தியாளர்களை சந்தித்தனர். இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, மோடி இதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் மிக மிக பலவீனமானவர். ஆனால் அதை அவர் திறமையாக திசை திருப்பி வருகிறார் என்று விமர்சனம் செய்தார். விவசாயிகளையும், வியாபாரிகளையும் நேருக்கு நேர் சந்திக்க தைரியம் இல்லாதவர் என்று மோடியை விமர்சனம் செய்த பிரியங்கா காந்தி, கோட்சே பற்றி எழுந்துள்ள சர்ச்சையில் அவர் தனது தெளிவான கருத்தை சொல்லவில்லை என்றார்.
எனது குழந்தைகளை நான் அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன் என்றும், தாய் என்ற முறையில் அவர்களை வேறு துறைக்கு செல்ல அறிவுறுத்தி வருகிறேன் எனவும் தெரிவித்த அவர், ஆனால் எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றும் பதிலளித்தார்.
மேலும், எதிர்காலத்தில் அவர்கள் தங்களது பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. எனவே அவர்களை கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க மாட்டேன் என்றும் கூறினார்.
அரசியலில் ராகுல் காந்தி என்னை விட 15 ஆண்டுகள் மூத்தவர் என்றும் நான் அரசியலுக்கு வந்து 15 வாரங்கள் தான் ஆவதாக கூறிய பிரியங்கா காந்தி, ராகுலிடம் இருந்து தான் அரசியல் பற்றி கேட்டு வருவதாக குறிப்பிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications