ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய கேப்டன் வருண் சிங்கிற்கு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை
டெல்லி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட க்ரூப் கேப்டன் வருண் சிங், தற்போது 45% தீ காயங்களுடன் வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தற்போது அவர் பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்
சூலூர் ஏர்ஃபோர்ஸில் இருந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் சென்ற எம்ஐ ரக ஹெலிகாப்டர் நேற்று விபத்தில் சிக்கியது.
குன்னூர் அருகே நடந்த இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் உயிரிழந்தனர்.

கோர விபத்து
இந்த விபத்திற்கான காரணம் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இன்று காலை தான் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்யும் போது விபத்து குறித்துப் பல முக்கிய தகவல்கள் தெரிய வரும். கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தள்ளாடியபடி மரத்தில் மோதி விழுந்து எரிந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

45% தீக்காயம்
இந்த மோசமான விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் க்ரூப் கேப்டன் வருண் சிங் தவிர மற்ற 13 பேரும் உயிரிழந்தனர். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்டோரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங், 45 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றாலும்கூட அவரது உடல்நிலை சீராகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.

தீவிர சிகிச்சை
தற்போது அவர் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக அவரை பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ராணுவம் முடிவெடுத்துள்ளது. விமான ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவில் விமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "குரூப் கேப்டன் வருண் சிங் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவரது உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.

யார் இந்த வருண் சிங்
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று தான், லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் (LCA) படைப்பிரிவில் பைலட்டாக இருந்த விங் கமாண்டர் வருண் சிங்கிற்கு அவரது துணிச்சலான சாதனைகளுக்காக இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது.

பாதுகாப்புத் துறை அமைச்சகம்
இந்த விபத்து தொடர்பாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விங் கமாண்டர் வருண் சிங் கடந்த ஆண்டு முதல் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பிரஷரைசேஷன் சிஸ்டத்தை கண்காணிக்கும் பணியில் இருந்தார். கடந்த காலத்தில் ஒரு முறை, அவர் இயக்கிய விமானத்தின் காக்பிட் பிரஷரைசேஷன் குறைய தொடங்கியது. அப்போது விமானம் கட்டுப்பாட்டை இழப்பதை அவர் சரியாகக் கண்டுகொண்டார்.
Recommended Video

அசாதாரண வீரர்
அப்போது திடீரென விமானம் மளமளவெனச் சரியத் தொடங்கியது. காக்பிட் அழுத்தம் குறைந்ததால் அப்போது அனைவருக்கும் மயக்கம் ஏற்படும் சூழல் கூட ஏற்பட்டது. இருப்பினும், விமானத்தை மீண்டும் வருண் சிங் கட்டுக்குள் கொண்டு வந்தார். விமானம் 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது, அந்த விமானம் மீண்டும் கட்டுப்பாட்டை இழந்தது. இதுபோன்ற சமயத்தில் விமானியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் விமானத்தை விட்டு அவர்கள் வெளியேறிவிடலாம். இருப்பினும், வருண் சிங் அதைச் செய்யாமல், அந்த இக்கட்டான சூழலிலும் கூட விமானத்தைக் கட்டுக்கோப்பாக இயக்கி தரையிறக்கினார். அப்படிப்பட்ட சிறந்த வீரர் தான் வருண் சிங்" என்றார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications