உறையவைக்கும் குளிர்.. டெல்லி உள்பட 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்.. தமிழ்நாடு நிலவரம் இதுதாங்க.. ஆஹா
டெல்லி: இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது குளிர், மூடுபனி அதிகம் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் குளிர் அலை வீசி வருவதால் இந்தியாவில் 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும், 2 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டில் குளிர் எப்படி இருக்கும்? என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியாவில் டிசம்பர் இறுதி மற்றும் ஜனவரி மாதத்தில் குளிர்வாட்டி வதைப்பது வாடிக்கையான ஒன்றாகும். மேலும் பனிமூட்டமும் அதிகமாக இருக்கும். இதனால் ஆண்டுதோறும் பல மாநில மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டும் குளிர்வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள மாநிலங்களில் கடும் குளிர், மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

கடும் குளிர்
தலைநகர் டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தற்போது கடும் குளிர் உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் மட்டும் கடும் குளிரால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட்டு ஒரேநாளில் 25 பேர் வரை இறந்துள்ளனர் என்றால் அங்கு நிலவும் குளிரை நீங்கள் சிந்தித்து பார்த்து கொள்ளுங்கள். டெல்லியை பொறுத்தவரை குறைந்தபட்ச வெப்பநிலை 1.8 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேச மாநிலங்களில் வெப்பநிலை மிகவும் குறைந்து உள்ளது. மேலும் மூடுபனி நிலவி வருகிறது.

மக்கள் பாதிப்பு
காலை 11 மணி என்றாலும் கூட எதிரே வரும் நபர்கள் தெரியாத வகையில் டெல்லி உள்பட பல மாநிலங்களில் எதிரே வரும் நபர்கள் தெரியாத வகையில் பனிமூட்டம் நீடித்து வருகிறது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன. மேலும் விமானம், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான விமானங்கள் தரையிறங்க முடியாமல் பிற இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்
இந்நிலையில் தான் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி குளிர் அலை வீசி வருவதால் பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கு குளிருக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராஜஸ்தான், பீகார் ஆகிய 2 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை வரை இந்நிலை தொடரும். இந்த மாநிலங்களில் நாளை மூடுபனி இருக்கும். அதன்பிறகு வடமாநிலங்களில் ஜனவரி 10ம் தேதி முதல் குளிர் என்பது படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிய தமிழ்நாடு
இந்திய வானிலை ஆய்வு மையம் குளிர் தொடர்பாக எச்சரிக்கை விடுத்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. இருப்பினும் தமிழ்நாட்டில் குளிர் அலை வீச்சால் ஏற்படும் குளிரை விட வழக்கம்போல் நிலவும் பனி பொழிவு இருக்கலாம் என கூறப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இரவிலும், அதிகாலையிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு படிப்படியாக குளிர் குறைய தொடங்கும் என வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications