உஷார்.. ஏப்ரலில் 16 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை! காரணத்தை தெரிஞ்சுகிட்டு பாதுகாப்பாக இருங்க!
டெல்லி: இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16.66 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை மொத்தம் 67 லட்சத்துக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் செல்போனில் தகவல்கள் பரிமாறும் தளமாக வாட்ஸ்அப் மாறியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
சொல்லப்போனால் கொரோனா காலத்தை தொடர்ந்து பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பாடங்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக பகிரப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை
இந்த வாட்ஸ்அப் தளத்தை தவறாக பயன்படுத்தாமல் இருக்கவும், பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அந்த நிறுவனம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை வாட்ஸ்அப் மூலம் செய்யும் நபர்களின் கணக்கை அந்த நிறுவனம் தடை செய்து வருகிறது.

16.66 லட்சம் கணக்குகள் தடை
அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் 16.66 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் மாதாந்திர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‛‛பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் மொத்தம் 122 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு வாட்ஸ் அப்பில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை தடுக்கும் முனைப்பில் நிறுவனம் சார்பில் 16.66 லட்சம் கணக்குகளைத் தடை செய்துள்ளது.

தடை ஏன்?
நாங்கள் குற்றம் நடைபெறுவதை தடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். ஒரு தவறு நடந்த பிறகு அதற்கு தீர்வு காண்பதை விட முன்கூட்டியே அதனை தடுப்பது சிறந்தது. இதை சிறப்பாக கையாள நாங்கள் விரும்புகிறோம். இதனால் வாட்ஸ்அப் விதிமுறைப்படி ஒரு பயனாளரின் கணக்கு மதிப்பிடப்படும். அதில் அவர் வாட்ஸ்அப் செயலியை தவறாக பயன்படுத்துகிறார் என்று தெரிய வரும்போது அவரது கணக்கை தடை செய்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாலியல் துன்புறுத்தல், சட்டவிரோத செயல், வாட்ஸ்அப் விதிமுறைகள் மீறல் உள்ளிட்டவை தொடர்பான புகார்களால் கணக்குகள் தடை செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கு முன்பு எவ்வளவு?
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 18 லட்சம் கணக்குகளும், பிப்ரவரியில் 14.26 லட்சம் கணக்குகளும் ஜனவரியில் 18.58 லட்சம் கணக்குகளும் தடை செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து ஏப்ரல் மாதம் மட்டும் 16.66 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 4 மாதத்தில் மட்டும் இந்தியாவில் 67 லட்சத்துக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications