"ரத்தம் சிந்துவதால் ஒரு பிரச்சினையும் தீராது".. ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
டெல்லி: உக்ரைன் மீது போரிட்டு வரும் ரஷ்யாவை ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போரிட்டு வருகிறது. உலக நாடுகள் எத்தனையோ முறை அறிவுறுத்தியும் ரஷ்யா தனது முடிவிலிருந்து பின் வாங்கிக் கொள்ளவில்லை.
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் சேதத்தை சீரமைக்க இன்னொரு தலைமுறையாகும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக தெரிவித்திருந்தார். இந்த நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல்களை போர் குற்றமாக அமெரிக்கா அறிவித்தது.

ரஷ்யா நீக்கம்
ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்குவதற்கான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆதரித்து 93 நாடுகள் வாக்களித்தன. இதற்கு எதிராக 24 நாடுகள் வாக்களித்தன.

58 நாடுகள்
இந்தியா உள்பட 58 நாடுகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. இந்த நிலையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்ததால் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இதையடுத்து ரஷ்யாவை ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில்
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை ஐநா பாதுகாப்பு கவுன்சில், ஐநா பொது சவை , ஐநா மனித உரிமைகள் கவுன்சில் ஆகியவற்றில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 8 தீர்மானங்களையும் இந்தியா நடுநிலை வகித்து வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது. ஐநா மனித உரிமை கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி கலந்து கொண்டார்.

உயிர்களை காவு வாங்குதல்
அவர் கூறுகையில் அப்பாவி மக்களின் உயிர்களை காவு வாங்குவதாலோ அல்லது ரத்தம் சிந்துவதாலோ எந்த பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கிடைக்காது. இந்தியா எப்போதுமே அமைதி நிலவுவதையே விரும்புகிறது. வன்முறைக்கு உடனடி முடிவு கொண்டு வர வேண்டும். பேச்சுவார்த்தை மூலமே அனைத்துக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

மோசமான சூழல்
அண்மைக்காலமாக நடந்து வரும் மோசமான சூழல்கள் கவலையளிக்கின்றன. அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வர வேண்டும். மனித உயிர்கள் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் போது ராஜாங்க ரீதியிலான தீர்வை மட்டுமே கையில் எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

புச்சா சம்பவம்
அண்மையில் புச்சாவில் நடந்த தாக்குதலில் 400 க்கும் மேற்பட்ட அப்பாவிகளை ரஷ்ய ராணுவம் கொன்றது. இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த போது இந்தியா, புச்சாவில் நடந்துள்ள சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்பு ரஷ்யாவை நிறுத்த வேண்டும் என இந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட்












Click it and Unblock the Notifications