தொடர்ந்து அதிகரிக்கும் கோதுமை விலை..ஏற்றுமதிக்கு அதிரடியாக தடை விதித்த இந்தியா.. என்ன காரணம் தெரியுமா
டெல்லி: இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப். மாதம் இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தது. சுமார் 2 மாதங்களைக் கடந்தும் இந்தப் போர் தொடர்ந்து வருகிறது.
இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளில் இருந்து வரும் பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உலக நாடுகளில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி போர் காரணமாக இரு நாடுகளில் இருந்து வரும் கோதுமை தடைப்பட்டுள்ளன.
இதன் காரணமாக எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்குத் திட்டமிட்டிருந்தன. தனியார் ஏற்றுமதி நிறுவனங்களும் விவசாயிகளிடம் இருந்து கோதுமையைக் கொள்முதல் செய்து, அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தன.
தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு வாங்குவதால் விவசாயிகள் அரசு கொள்முதலுக்குக் கோதுமை தருவதைக் கடந்த சில மாதங்களாகவே குறைத்து இருந்தனர். இதையடுத்து கடந்த 2 மாதமாகக் கோதுமை விலை நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்தச் சூழலில் இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டில் விலை ஏற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதிகளவு ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications