செம சாதனை! உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறிய இந்தியா! பிரிட்டனை பின்னுக்கு தள்ளி அசத்தல்
டெல்லி: பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது என ப்ளூம்பெர்க்கின் சமீபத்திய ஆய்வு முடிவு உறுதி செய்துள்ளது. இதன்மூலம் இந்தியா சாதனை படைத்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தன. குறிப்பாக பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி என்பது சரிவை சந்தித்தன. இந்தியாவும் பொருளாதார சரிவை காணலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர்.
இந்தியாவின் பொருளாதாரமும் சீர்குலைந்து, சரிவை நோக்கி செல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். ஆனால் மத்திய பாஜக அரசு இதனை மறுத்தது. இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. உலகில் மிக வேகமாக பொருளாதாரம் வளரும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது.
பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்.. உதவிக்கரம் நீட்டிய சவுதி அரேபியா.. 1 பில்லியன் டாலர் முதலீடு!
5வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா
இந்நிலையில் தான் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது என சந்தை ஆய்வு நிறுவனமான ப்ளூம்பெர்க்கின் ஆய்வு கூறியுள்ளது. ப்ளூம்பெர்க்கின் கணக்கீட்டின்படி 2022 மார்ச் இறுதியில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலானது சர்வதேச நாணய நிதியத்தின் தரவு மற்றும் historic exchange rates அடிப்படையில் ப்ளூம்பெர்க் கூறியுள்ளது.
857.7 பில்லியன் டாலர் பொருளாதாரம்
இதுதொடர்பாக ப்ளூம்பெர்க் அறிக்கையில், ‛‛2022 மார்ச்சில் முடிந்த காலாண்டின் கடைசிநாள் படி டாலர் மாற்று விகிதத்தை பயன்படுத்தி மார்ச் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் அளவு 'nominal' பண அடிப்படையில் 854.7 பில்லியன் டாலராக இருந்தது. இது பிரிட்டனில் 816 பில்லியன் டாலராக உள்ளது'' என கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையே பொருளாதாரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ப்ளூம்பெர்க் கூறியுள்ளது. இதுதொடர்பாக ப்ளூம்பெர்க் அறிக்கையில், ‛‛2022 மார்ச்சில் முடிந்த காலாண்டின் கடைசிநாள் படி டாலர் மாற்று விகிதத்தை பயன்படுத்தி மார்ச் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் அளவு 'nominal' பண அடிப்படையில் 854.7 பில்லியன் டாலராக இருந்தது. இது பிரிட்டனில் 816 பில்லியன் டாலராக உள்ளது'' என கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிற்கும், பிரிட்டனுக்கும் இடையே பொருளாதாரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ப்ளூம்பெர்க் கூறியுள்ளது.
இந்தியாவுக்கு முக்கிய மைல்கல்
இந்தியா சுதந்திரம் அடைந்ததன் நூற்றாண்டு விழா கொண்டாடும் 2047 ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறிய நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் சார்ந்த விஷயத்தில் இது முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஐந்து முக்கிய வித்தியாசங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும்.
1. மக்கள் தொகை
இந்தியா-பிரிட்டன் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளில் ஒன்று மக்கள் தொகை. 2022ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் மக்கள் தொகை 1.41 பில்லியனாகவும், பிரிட்டன் மக்கள் தொகை 68.5 மில்லியனாகவும் உள்ளது. அதாவது இந்தியாவின் மக்கள் தொகை இங்கிலாந்தை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது. இந்த இடைவெளியை விரைவில் சரிசெய்ய முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
2. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி
தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அந்த நாட்டின் மக்கள்தொகையால் வகுக்கப்படுவதன் மூலம் கிடைப்பதாகும். மக்கள்தொகை அடிப்படையில் இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தற்போது இந்தியரின் சராசரி வருமானம் மிகவும் குறைவாக உள்ளது.
3. வறுமை விவகாரம்
குறைந்த தனிநபர் வருமானம் பெரும்பாலும் அதிக அளவிலான வறுமையை குறிக்கும். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தீவிர வறுமையில் பிரிட்டனின் பங்கு இந்தியாவை விட கணிசமாக அதிகமாக இருந்தது. ஆனால் இன்று வறுமையைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா மாபெரும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் அதுதொடர்பான விஷயங்களை இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
4 மனித வளர்ச்சிக் குறியீடு
அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேகமான பொருளாதார வளர்ச்சியின் இறுதி இலக்கு என்பது சிறந்த மனித வளர்ச்சி அளவுகளே ஆகும். மனித வளர்ச்சிக் குறியீடு என்பது சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் கலவையாகும். இங்கிலாந்தின் எச்டிஐயில் இந்தியா நிற்கிறது. மதச்சார்பற்ற முன்னேற்றம் இருந்தபோதிலும் 1980ல் பிரிட்டன் இருந்த இடத்திற்கு இந்தியா வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது.
5 உலகளாவிய சுகாதார கவரேஜ்
பணக்கார நாடாக அல்லது வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்றால் மக்களுக்கு சுகாதார சேவை மிகவும் முக்கியமாகும். இதுதான் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும். உலகளாவிய சுகாதார கவரேஜ் (UHC) அட்டவணையானது தாய், குழந்தை பிறப்பு, குழந்தைகளின் ஆரோக்கியம், தொற்று நோய், மருத்துவ சேவை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரிட்டனை ஒப்பிடும்போது இந்தியா 2005ல் இருந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. இருப்பினும் இந்த பிரிவில் இந்தியா இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டியது அவசியமாகும்.