கொரோனாவால் ஒரே நாளில் 1206 பேர் மரணம் - பாதிப்பில் இருந்து 2,99,33,538 பேர் மீண்டனர்
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 1,206 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,07,145 பேராக அதிகரித்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழாக குறைந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,206 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,07,145 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,99,33,538 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 1 மாத காலமாக 50 ஆயிரத்திற்கும் கீழே குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை விட குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தினசரியும் உயர்ந்து வருகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றினால் 42,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,07,95,716 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 45,254 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,99,33,538 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் ஒரே நாளில் 1,206 பேர் மரணமடைந்துள்ளனர். தினசரி கொரோனா மரணங்கள் ஆயிரத்திற்கும் கீழே குறைந்த நிலையில் இன்றைய தினம் 1,206 பேராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,07,145 பேராக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,55,033 பேராக குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications