நிலையான வளர்ச்சி.. இந்தியாவிலேயே கேரளாவிற்கு முதலிடம்.. தமிழ்நாடு 2ம் இடம்.. நிதி ஆயோக் அறிவிப்பு!
டெல்லி: இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலில் கேரளா முதல் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
உலகம் முழுக்க ஐநா அமைப்பில் உள்ள நாடுகளில் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில் Sustainable Development Goals எனப்படும் வளர்ச்சி கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும், நாடுகளில் உள்ள மாநிலங்களில் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2018ல் இருந்து இந்த எஸ்டிஜி கணக்கீடு செய்யப்படும். பல்வேறு துறைகளில் நிலையான வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை இதை வைத்து நிதி ஆயோக் இந்தியாவில் கணக்கீடு செய்கிறது.

என்ன
சுகாதாரம், கல்வி, மருத்துவம், தொழில்துறை, தனி நபர் வருமானம் என்று 13 இலக்குகள், 39 குறியீடுகள், 62 காரணிகளை மையமாக வைத்து இந்த கணக்கீடு செய்யப்படும். அதாவது ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் எவ்வளவு வருமானம் பெறுகிறார்கள், எவ்வளவு கல்வி கொண்டு உள்ளனர், எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர். அவர்களின் சுகாதார மருத்துவ வசதி எவ்வளவு பூர்த்தி செய்யப்படுகிறது என்பதை மையமாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கேரளா
கடந்த வருடம் இதில் கேரளா முதலிடம் பெற்ற நிலையில், இந்த வருடமும் கேரளா இதில் முதலிடம் பெற்றுள்ளது. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றுள்ளது. கேரளா 75 புள்ளிகளையும், தமிழ்நாடு 74 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இமாச்சல பிரதேசமும் 74 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

புள்ளிகள்
52 புள்ளிகள் பெற்று பீகார் கடைசி இடத்தில் உள்ளது. 56 புள்ளிகளுடன் ஜார்க்கண்ட் பீகாருக்கு மேலே உள்ளது. 57 புள்ளிகளுடன் அசாம் ஜார்கண்டிற்கு மேலே உள்ளது. கடைசி மூன்று இடங்களில் அசாம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளது.

யூனியன்
யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் 79 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், டெல்லி 68 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், லட்சத்தீவு 68 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

அதிக புள்ளிகள்
இந்த முறை மிசோரம் சென்ற ஆண்டை விட கூடுதலாக 12 புள்ளிகள் பெற்றுள்ளது, ஹரியானா 10 புள்ளிகளை பெற்றுள்ளது. உத்தரகாண்ட், மஹாராஷ்டிரா, குஜராத் மிசோரம், பஞ்சாப், ஹரியானா, திரிபுரா, டெல்லி, லட்சத்தீவு, ஜம்மு காஷ்மீர், லடாக், வேகமாக முன்னேறும் போட்டியாளர்களாக உள்ளனர்.

தமிழ்நாடு
தனிப்பட்ட வகையில் தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு, டெல்லி வேகமாக முன்னேறி வருகிறது. குஜராத், டெல்லி இரண்டும் சுகாதாரத்துறையில் முன்னிலையில் உள்ளது. கேரளா சண்டிகர் இரண்டும் கல்வித்துறையில் நன்றாக செயல்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த எஸ்டிஜி புள்ளி 6 புள்ளிகள் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் 60 ஆக இருந்த புள்ளி இந்த முறை 66 ஆக உயர்ந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications