எதிர்க்கட்சிகளின் அமளி- ராஜ்யசபா, லோக்சபாவில் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றம்!
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா விவாதங்கள் இல்லாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இக்கூட்டத் தொடர் தொடங்கிய உடனேயே லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.
சில எம்.பி.க்கள் சபை நடுவே நின்று கொண்டு முழக்கங்களை எழுப்பினர். வேளாண் விளைபொருட்களுக்கு ஆதார விலையை நிர்ணயித்து சட்டம் நிறைவேற்ற வேண்டும், விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

லோக்சபாவில் அமளி
மேலும் சில எம்.பிக்கள், உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். ஆகையால் அஜஸ் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பி பதாகைகளை தூக்கிப் பிடித்தனர். இந்த அமளியைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றம்
இதன்பின்னர் சபை கூடிய போது மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 3 விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்தார். இம்மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. பிற்பகல் 2 மணிக்கு சபை கூடிய போதும் அமளி நீடித்ததால் இன்று நாள் முழுவதும் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

திமுக எம்.பிக்கள் பதவியேற்பு
ராஜ்யசபாவில் இன்று திமுகவின் புதிய எம்.பிக்களான ராஜேஷ் குமார், அப்துல்லா, கனிமொழி சோமு ஆகியோர் பதவியேற்றனர். மூன்று பேரும் தமிழில் பதவியேற்றனர். ராஜேஷ்குமார் எம்.பி. பதவி ஏற்று முடிக்கும் போது, வெல்க தளபதி, வெல்க அண்ணன் உதயநிதி என முழக்கங்கள் எழுப்பினார். இந்த முழக்கங்கள் சபை குறிப்பில் இடம்பெறாது என ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். இதனைத் தொடர்ந்து மறைந்த எம்.பிக்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் குறிப்புகளை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு வாசித்தார். பின் மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சபை நடவடிக்கைகள் 1 மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் சபை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்றன. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டதால் ராஜ்யசபா நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றம்
பிற்பகல் 2 மணிக்கு ராஜ்யசபா கூடிய போது, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திரும்பப் பெறும் மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார். இம்மசோதா ராஜ்யசபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றபட்டதாக ராஜ்யசபா துணைத் தலைவர் அறிவித்தார். அப்போதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளி நீடித்ததால் சபை நடவடிக்கைகள் சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications