மணிப்பூர் தேர்தல் தேதி மாற்றம்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.! காரணம் இது தான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு தேதிகள் மாற்றப்படுவதாகத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதிகபட்சமாக உபி-இல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதலில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகள் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

 Manipur Election Dates Revised: 1st Phase On Feb 28, 2nd On March 5

30 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மணிப்பூரில் சுமார் 41% கிறிஸ்துவர்கள். பிப்ரவரி 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சர்ச் நிகழ்வுகள் இருக்கும் என்பதால் முதல் கட்ட வாக்குப்பதிவை (பிப்ரவரி 27) ஒத்தி வைக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.

இந்தச் சூழலில் தற்போது வாக்குப்பதிவு தேதிகளை மாற்றித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 28ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 5ம் தேதியும் நடைபெற உள்ளது.

உத்தரப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்குகள் வரும் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+