மணிப்பூர் தேர்தல் தேதி மாற்றம்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.! காரணம் இது தான்
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு தேதிகள் மாற்றப்படுவதாகத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதிகபட்சமாக உபி-இல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதலில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகள் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

30 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மணிப்பூரில் சுமார் 41% கிறிஸ்துவர்கள். பிப்ரவரி 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சர்ச் நிகழ்வுகள் இருக்கும் என்பதால் முதல் கட்ட வாக்குப்பதிவை (பிப்ரவரி 27) ஒத்தி வைக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.
இந்தச் சூழலில் தற்போது வாக்குப்பதிவு தேதிகளை மாற்றித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 28ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 5ம் தேதியும் நடைபெற உள்ளது.
உத்தரப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்குகள் வரும் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்?












Click it and Unblock the Notifications