Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்லாது செல்லாது.. மாஸ்க் போடுங்க , தள்ளி இருங்க... ஓமிக்ரான் கம்மிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதியதாக கண்டுபிடிக்கப்பட்டு உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் திரிபான ஓமிக்ரான், தடுப்பூசி மருந்தை 40 சதவீதம் வரை செயலலிழக்க வைக்கும் தன்மை கொண்டதாக இருக்குமென ஆய்வாளர்கள் கருதுவதால் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளி அவசியம் என சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று திடீரென அதிகரித்து 2400 பேர் வரை பாதிக்கப்பட்டனர். பிரிட்டோரியா மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த புதிய வகை கொரோன வைரஸ் அதிகமான வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாகவும் உருமாற்றங்கள் அதிகம் கொண்டதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வைரசுக்கு பி11529 என்றும், ஓமிக்ரான் எனவும் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இருந்து சென்ற பயணிகள் உடலில் இருந்த கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Medical experts have warned that it is necessary for the public to wear masks

இதனையடுத்து உச்சபட்ச எச்சரிக்கையில் உள்ள உலக நாடுகள் புதிய வகை வைரஸ் தாக்கத்தால் தங்கள் நாடுகளுக்கு விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் வர தடை கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் இந்தியாவும், தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பாக பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் இந்த வகை வைரஸ் தடுப்பூசியை எதிர்க்கும் தன்மை கொண்டதாக அறிகுறிகள் இருப்பதால் தடுப்பூசி போட்டு இருந்தாலும் மக்கள் எச்சரிக்கை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய முதற்கட்ட ஆய்வு முடிவுகளின்படி, ஒமிக்ரான் வைரஸின் அடிக்கடி உருமாறும் தன்மை காரணமாக தடுப்பூசி மருந்துகளை 40 சதவீதம் அளவுக்கு எதிர்க்கும் தன்மை இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஓமிக்ரான் அதிகமுறை உருமாற்றம் அடைவதால் இவை நிச்சயம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் டாக்டர். மரியா வான் கெர்கோ எச்சரித்துள்ள நிலையில், மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல், சானிடைசர் உபயோகம் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் தற்போது மக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

Recommended Video

    Omricon Covid variant from South Africa Triggers World | OneIndia Tamil

    இந்தநிலையில், மீண்டும் கடந்தாண்டுகளைப் போல் பாதிப்பு அதிகமானால் முழு அடைப்புதான் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும். எனவே, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டுமென நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+