இந்தியா இழந்தது கோல்டன் வாய்ப்பு... உச்சத்தில் கொரோனா... காங்கிரஸ் எம்பி குலாம் நபி விளாசல்!!
டெல்லி: டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனாவை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. நமக்கு அண்டை நாடாக சீனா இருந்தும் கவனம் செலுத்தவில்லை. கொரோனா குறித்து முதலில் ராகுல் காந்தி எச்சரிக்கை செய்தார் என்று இன்று ராஜ்ய சபாவில் காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு 51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 லட்சம் பேர் மீண்டுள்ளனர். 83,198 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். கொரோனா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவி இருந்தது.

ஊரடங்கு
ஆனால், இந்தியாவில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல்தான் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு இருந்தது. வர்த்தகம், தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என்று அனைத்தும் மூடப்பட்டன. துவக்கத்தில் மெதுவாக பரவி வந்த தொற்று சமீப நாட்களில் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு
இதனால், மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தொற்றும் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். துவக்கத்திலேயே கட்டுப்படுத்துவற்கு மத்திய அரசு தவறிவிட்டது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்பு தவிர்ப்பு
இதற்கிடையே நேற்று லோக் சபாவில் பேசி இருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் கொரோனா பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 80000த்துக்கும் அதிகமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

அறிவியல்
இதற்கு காங்கிரஸ் எம்பியும், லோக் சபா தலைவருமான அதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தார். எந்த அறிவியலின் அடிப்படையில் இதுபோன்ற தகவல்களை அவையில் தெரிவிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

ராகுல் காந்தி
இந்த நிலையில் இன்று ராஜ்ய சபாவில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான குலாம் நபி ஆசாத், ''சீனாவின் அண்டை நாடாக இந்தியா இருக்கிறது. அப்படி இருந்தும் கடந்த டிசம்பரில் இருந்து கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. கோல்டன் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துவக்கத்தில் இருந்தே இதுகுறித்து எச்சரித்து வந்தார். ஆனால், நிராகரிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications