குடியரசுத் தலைவர் தேர்தல்.. ஃபரூக் அப்துல்லா விலகல்.. வேட்பாளர் தேர்வில் திணறுகிறதா எதிர்க்கட்சிகள்?
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என்று தேசிய மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூன் 15ம் தேதி தொடங்கியுள்ளது. இதில் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் பொதுவான ஒரு வேட்பாளரை தேர்வு செய்ய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தரப்பில், 22 எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், குடியரசுத் தலைவர் தேர்தலில் சரத் பவார் மறுப்பு தெரிவித்தார். இதனால் பொதுவான வேட்பாளரை கண்டறிய, 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சரத் பவார் ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்தக் குழு குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று முடிவு செய்யும் என்று கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்தக் குழு பல்வேறு மூத்தத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஃபரூக் அப்துல்லாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, நான் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கும், இந்தியாவுக்கும் தொடர்ந்து சேவை செய்ய விரும்புகிறேன். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக என்னை முன்மொழிந்த மம்தா பானர்ஜிக்கும், எனக்கு அழைத்து ஆதரவு கூறிய எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான சூழலில் ஜம்மு காஷ்மீர் மாநில சிக்கி இருப்பதால், நான் குடியரசுத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற பாஜகவுக்கு 13 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கூடுதலாக தேவை என்பதால், எதிர்க்கட்சிகளின் வெற்றி மிகவும் கடினம். இதனால் வேட்பாளரை தேர்வு செய்வதில் எதிர்க்கட்சிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. வரும் 21ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளதால், அடுத்த சில நாட்களுக்குள் வேட்பாளரை எதிர்க்கட்சிகள் தேர்வு செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications