Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிசிசிஐ-யில் கங்குலிக்கு “எக்சிட்”.. தலைவராக தேர்வானார் ரோஜர் பின்னி! செயலாளராக தொடரும் ஜெய்ஷா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 2வது முறையாக தலைவராவதற்கான வாய்ப்பு இருந்தும் அவர் நியமிக்கப்படவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிசிசிஐ தலைவராக கடந்த நவம்பர் மாதம் சவுரவ் கங்குலி பதவியேற்றார். செயலாளராக உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா பதவியேற்றனர். இவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது.

2 வது முறையாக இவர்கள் பதவி வகிக்க வாய்ப்பு இருக்கும் நிலையில் ஜெய்ஷா செயலாளர் பதவியில் தொடர்வார் என்றும், கங்குலி தலைவராக தொடர மாட்டார் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பே தகவல் வெளியானது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

சவுரவ் கங்குலிக்கு ஐபிஎல் தலைவர் பதவியை வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இது தொடர்பாக மும்பையிலும் கடந்த வாரம் டெல்லியிலும் அவர் ஆலோசித்து இருக்கிறார். எந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லையாம்.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியிடம் மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவி சவுரவ் கங்குலியிடம் இருந்து பறிக்கப்படுவதாக பிரதமர் மோடியிடம் கூறினார். ஐசிசி தலைவர் தேர்தலில் சவுரவ் கங்குலி போட்டியிடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பிசிசிஐ கூட்டம்

பிசிசிஐ கூட்டம்

இந்த நிலையில் இன்று பிசிசிஐயின் வருடாந்திர கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சவுரவ் கங்குலி வகித்த பிசிசிஐ தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

செயலாளர் ஜெய்ஷா

செயலாளர் ஜெய்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா இம்முறையும் செயலாளராக தொடர்கிறார். பிசிசிஐ துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சுக்லாவே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரிஜேஷ் பட்டேல் வகித்து வந்த ஐபிஎல் தலைவர் பதவிக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரின் சகோதரரும் பிசிசிஐ பொருளாளருமான அருண் சிங் தூமல் தேர்வாகியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+