முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடா? இல்லவே இல்லை.. அடியோடு மறுக்கும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே
மும்பை: முஸ்லிம்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்ட மேலவையில் அண்மையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மாநில அமைச்சர் நவாப் மாலிக், முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு கூட்டத் தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபை வளாகத்தில் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறியதாவது: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் எந்த ஒரு பரிந்துரையும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் சட்டப் பூர்வ அங்கீகாரம் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறோம். ஆனால் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.
இந்த பிரச்சனையில் பாஜகவினர் தேவையற்ற கூப்பாடுகளை போட்டு வருகின்றனர். இதில் சிவசேனாவின் நிலைப்பாட்டை இன்னமும் நாங்கள் அறிவிக்கவும் இல்லை. சாம்னாவின் எடிட்டராக இருந்த நான் முதல்வராகி இருக்கிறேன். அதனால்தான் ராஷ்மி ,சாம்னாவின் எடிட்டராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் அதில் இடம்பெறும் கருத்துகளை சஞ்சய் ராவத் முடிவு செய்வார்.
அயோத்திக்கு வரும் 7-ந் தேதி செல்கிறேன். அங்கு சென்று ராமரை வழிபட இருக்கிறேன். இதில் எங்கே அரசியல் இருக்கிறது என தெரியவில்லை? எனக்கு நம்பிக்கை இருகிறது . அதனால் வழிபாடு நடத்த செல்கிறேன். காங்கிரஸ் அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துவிட்டதால் கடவுளின் கதவுகள் மூடிவிடாது. என்னுடன் வர விரும்புகிறவர்கள் அயோத்திக்கு வரலாம். ஆதார் எண் இணைக்கப்பட்ட விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications