3 ஜாதியினர்தான் குடியரசுத் தலைவருக்கு பாடி-கார்ட் ஆக முடியுமா? டெல்லி ஹைகோர்ட் கேள்வி
இந்திய குடியரசுத் தலைவருக்கு பாதுகாவலர்களை தேர்வு செய்வதில் ஜாதி பாகுபாடு கடைபிடிக்கப்பட்டு வருவதை டெல்லி ஹைகோர்ட் கண்டித்து இருக்கிறது.
டெல்லி: இந்திய குடியரசுத் தலைவருக்கு பாதுகாவலர்களை தேர்வு செய்வதில் ஜாதி பாகுபாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறதா என்று மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவருக்கு, தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ராணுவம் இந்த பாதுகாப்பு படையை சிறப்பு பயிற்சியுடன் தேர்வு செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்த பாதுகாவலர்களை தேர்வு செய்வதில் ஜாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பாதுகாவலர் ஆக முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

என்ன நடந்தது
கவுரவ் யாதவ் என்ற ஹரியானவை சேர்ந்த நபர் கடந்த 2014 செப்டம்பர் மாதம், குடியரசுத் தலைவருக்கு பாதுகாவலராக விண்ணப்பம் செய்து இருந்தார். எல்லா விதமான தேர்வுகளிலும் வெற்றிபெற்ற இவர் நேர்முக தேர்விலும் வெற்றிபெற்றார். ஆனால் கடைசியில் இவர் தேர்வு செய்யப்படவில்லை.

என்ன விளக்கம்
இவருக்கு மத்திய அரசு அளித்த விளக்கத்தில், மூன்று ஜாதியினர் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு பாதுகாவலர் ஆக முடியும். ஜாட், ராஜ்புட் , ஜாட் சீக்கியர்கள் ஆகிய மேல் ஜாதியினர் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு பாதுகாவலர் ஆக முடியும். மற்ற ஜாதியினர் இதில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளது.

வழக்கு தொடுத்தார்
இந்த நிலையில் கவுரவ் யாதவ் டெல்லி ஹைகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடுத்தார். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. சட்ட பிரிவு 14,15,16 ஆகியவற்றிற்கு எதிரான நடைமுறை இது. சாதி, இனம், மொழியையே வைத்து இவர்கள் பாகுபாடு காட்ட கூடாது என்று கூறியுள்ளார்.

கேள்வி எழுப்பினர்
இந்த நிலையில் டெல்லி ஹைகோர்ட் தற்போது இதுகுறித்து மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அதேபோல் குடியரசுத் தலைவர் அலுவலகம், இந்திய ராணுவம், ராணுவ தேர்வாணையம், பாதுகாப்பு துறை ஆகிய அமைப்புகளுக்கு இதில் பதில் அளிக்க வேண்டும் என்றும் சம்மன் அனுப்பி உள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications