குளிர்கால கூட்டத்தொடர்: நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் இன்று என்ன நடக்கும்? முழு விபரம்
டெல்லி: நேற்று பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டு அவைகளிலும் முக்கியமான விவாதங்கள் நடைபெற்றன. முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
நேற்று லோக்சபாவில் தேர்தல் சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. விவாதம் இன்றி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதேபோல் இன்னொரு பக்கம் போதை பொருள் மற்றும் ஊக்க மருந்து சட்டத்தில் மாற்றங்களை செய்ய மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இன்னொரு பக்கம் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் காரணமாக இரண்டு அவைகளும் கொஞ்சம் பரபரப்பாக காணப்பட்டது. 4 கட்சிகளுடன் ராஜ்ய சபா சபாநாயகர் வெங்கய்யா நாயுடு தனிப்பட்ட வகையில் ஆலோசனையில் ஈடுபட முயன்றதும் தோல்வியில் முடிந்தது.
மக்களவை
இந்த நிலையில் இன்று மக்களவையில் பட்டய கணக்காளர்கள், செலவு மற்றும் பணி கணக்காளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்கள் திருத்த மசோதா அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதேபோல் மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.
மேலும் காலநிலை மாற்றம் குறித்தும் அவையில் விவாதிக்கப்பட உள்ளது.
மாநிலங்களவை
இன்னொரு பக்கம் மாநிலங்களவையில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்ற வாய்ப்பு
அரசின் செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரும் நிதி ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications