வீட்டிற்குள் உறவினர்கள் உள்பட யாரையும் அனுமதிக்காதீர்கள்- பிரதமர் மோடி உரை
டெல்லி: உறவினர்கள் உள்பட யாரையும் அனுமதிக்காதீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் இன்றிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம். எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.

நாடு முழுவதும் முடக்கம்
கொரோனாவால் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. முழுமையான பொறுப்போடு ஒரு நாள் சுய ஊரடங்கை ஒவ்வொருவரும் கடைப்பிடித்தார்கள். கொரோனா வைரஸை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா நம்மை பாதிக்காது என கருதக் கூடாது. பொருளாதாரத்தை விட உயிர் முக்கியமானது.

உறவினர்கள்
21 நாட்களுக்கு உறவினர்கள் உள்பட வெளியாட்கள் யாரையும் உங்கள் வீடுகளில் சேர்க்காதீர்கள். கொரோனா காட்டுத் தீ போல் பரவி வருகிறது. சுகாதாரமாக இருப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என மோடி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 1
கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு அடித்து பிடித்து சென்றனர். வேலையில்லாத நிலையில் வருமானமும் இல்லாததால் மேன்ஷன் வாடகை, உணவு உள்ளிட்டவைகளுக்கு செலவிட இயலாத சூழலால் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

நாட்டு நலன்
இன்னும் சிலர் தாய் வீடு, தங்கை வீடு, அக்காள் வீடு, உறவினர் வீடு, தாத்தா வீடு, பாட்டி வீடு என சென்றுள்ளனர். இந்த நிலையில் மோடி இவ்வாறு கூறியுள்ளார். எனினும் நாட்டின் பிரதமர் மோடி கொரோனா ஒழிப்புக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் கூறியுள்ளார் என்றே இந்த அறிவிப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். கொரோனாவை ஒழித்தால்தான் அனைத்து உறவினர்களுடனும் நாம் நல்லறவு பேண முடியும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள் மக்களே!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications