செஸ் ஒலிம்பியாட் 2022! நான் வர்றேன் சென்னைக்கு! ரொம்ப ஆர்வமாக இருக்கு! பிரதமர் மோடி போட்ட ட்வீட்!
டெல்லி : சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கும் நிலையில் நாளை (28 ஆம் தேதி) மாலை 6 மணிக்கு நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த 1400க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
போட்டி தொடக்க விழா நாளை (28 ஆம் தேதி) மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக நாளை பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு வருகிறார்.

செஸ் ஒலிம்பியாட்
விமானநிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிரதமரை வரவேற்கின்றனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு 8 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுக்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இரு நாட்கள் சென்னையில் தங்கியிருக்கும் பிரதமர், சென்னையில் பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.

44வது செஸ் ஒலிம்பியாட்
இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னையில் இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்," நாளை, ஜூலை 28 மற்றும் நாளை மறுநாள் குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளேன்.

பிரதமர் நரேந்திர மோடி
குஜராத்தில் மதியம் சபர் பால் பண்ணையில் ரூ.1000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறேன். பல ஆண்டுகளாக, குஜராத்தில் கூட்டுறவு மற்றும் பால் துறையை வலுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். சபார் பால் பண்ணையில், தூள் ஆலை மற்றும் அசெப்டிக் பால் பேக்கேஜிங் ஆலை திறக்கப்படும். சபார் சீஸ் மற்றும் மோர் உலர்த்தும் ஆலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்.

ஆவலுடன் காத்திருக்கிறேன்
நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தியாவிலேயே, அதுவும் செஸ்ஸுடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டிலேயே இது ஒரு சிறப்பான போட்டியாகும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications